315.
|
கனங்கொண்ட
மணிகண்டர் கழல்வணங்கிக்
கணவனைமுன் பெறுவாள் போல
|
|
|
இனங்கொண்ட
சேடியர்கள் புடைசூழ
வெய்துபெருங் காத லோடுந்
தனங்கொண்டு தளர்மருங்குற் பரவையும்வன் றொண்டர்பாற்
றனித்துச் சென்ற
மனங்கொண்டு வரும்பெரிய மயல்கொண்டு தன்மணிமா
ளிகையைச் சார்ந்தாள். |
169 |
(இ-ள்.)
கனங்கொண்ட..........பெறுவாள்போள் -
மேகத்தின்
தன்மை கொண்ட அழகிய திருநீலகண்டமுடைய தியாகேசரது
திருவடிகளை வணங்கி (அவ்வணக்கத்தின் பயனாகப்
பெற்ற அவரது
திருவருளின் மூமம்) கணவனை மேலே பெறுபவள் போல; இனம்
கொண்ட.......பரவையாரும் - தம்மோடு ஒத்து வாழும் தன்மையுடைய
தோழியர்கள் தம்மைச் சுற்றி வரவும், தம்மிடம் புதிதாய் வந்தடைந்த
காதலுடனே தனபாரங் கொண்டு தளர்வுற்ற இடையையுடைய
பரவையாரும்; வன்றொண்டர்பால்........சார்ந்தாள் - வன்றொண்டராகிய
நம்பிகளிடத்தே தம்மையும் சேடியரையும் விட்டுத் தனியாகப்
போய்த் திரும்பும்போது தமது மனமானது சேர்த்துக்கொண்டு வந்த
பெரிதாகிய மயலையும் மேற்கொண்டவராய்த் தமது அழகிய
திருாமளிமையைச் சார்ந்தார்.
(வி-ரை.)
கனம் கொண்ட மணிகண்டர் - கனம் - மேகம்.
இங்கு அதன் தன்மையைக் குறித்தது. கனம் கொண்ட கண்டர் -
மேகத்தின் கருமை, கொடை, உலகம் காத்தல் முதலிய எல்லாத்
தன்மைகளுக்கும் இருப்பிடமாதல். 297 திருப்பாட்டின்கீழ் “மைவாழுந்
திருமிடற்று வானவன்“ என்றதன் உரைக்குறிப்பைப் பார்க்க. கனம் -
பெருமையுமாம்.
வணங்கிக் கணவனைப் பெறுவாள்போலப் - பரவையும்
-
சூழக் - காதலோடு - மயலும்கொண்டு மாளிகையைச் சார்ந்தாள்
என்று கூட்டிக் முடிக்க.
கழல் வணங்கிக் கணவனை முன் பெறுவாள்போல - முன்
பெறுவாள் - முன் - காலமுன். வருங்காலத்திலே என்க. போலச்
சார்ந்தாள் என்க.
“அன்னவரே
யெங்கணவ ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்“ |
என்னும் திருவெம்பாவைக்
கருத்துங் காண்க.
முன்னே சென்று வணங்குதற்கும் பின்னே கணவனைப்
பெறுதற்கும் இடையில் மாளிகை சார்தல் நிகழ்ந்ததாதலின்
வணங்கினதாகிய காரணத்தையும் பெறுவதாகிய காரியத்தையும்
கூட்டுவிக்கும் தொழில்போல் மாளிகை சார்தல் நிகழ்ந்ததாம் என்பார்
போல - என்றார்.
இனங்கொண்ட
- தம்மைப்போலவே தம்மிடத்து இனியராய்
ஒன்றாய்க் கூடிய தன்மை கொண்ட.
எய்து பெருங்காதல்
- (எண் கொள்ளாக் காதலினால், முன்பு
எய்தாமல் - 289) இன்று புதிதாய் எய்திய ஒரு பெரிய விருப்பம்.
தனங்கொண்டு தளர்
மருங்குல் - முன்னரே பணைத்ததோடு,
தனங்கள், காதலினாற் பின்னரும் பணைத்த காரணத்தால் மேலும்
தளர்ந்த இடை. “அனங்கன்மெய்த் தனங்க ளீட்டங் கொள்ள
மிக்குயர்வ போன்று“ (282) என்று முன்னர்க் கூறியதற்கேற்பக்
காதலோடுந் தனங் கொண்டு என்றார்.
தனித்துச் சென்ற மனம்
- இனமான சேடியர் புடைசூழத்
தாம் செல்லினும், தமது மனம் தனித்து அவர்பாற் போயிற்று என்பது
குறிப்பு.
மனம் கொண்டு வரும்
பெரிய மயல் - தனித்துச்
சென்றதாயினும் தாங்கலாகாப் பெருஞ் சுமையைக் கொண்டுவந்தது
என்பதாம். கொண்டு வரும் - ஒரு சொன்னீர்மைத்தாய்ப் பெற்றுச்
சுமந்து வரும் என்ற பொருளில் வந்தது. மனம் - கொண்டு -
தயங்கப் போன நெஞ்சை மீள அழைத்துக் கொண்டு. போயினது
மனம் ஒன்றேயாயினும் வரும்போது மயலும் மனமுமாக
இரண்டாயிற்று என்க.
பரவையும்
- நம்பிகள் தேவாசிரியனைச் சார்ந்ததுபோலப்
பரவையும் மாளிகை சார்ந்தாள் - என எச்சவும்மை. 169
|