32.
|
அன்ன வன்பெய ராலால சுந்தரன்
|
|
|
முன்ன
மாங்கொரு நாண்முதல் வன்றனக்
கின்ன வாமெனு நாண்மலர் கொய்திடத்
துன்னி னானந் தனவனச் சூழலில். |
22 |
(இ-ள்.)
அன்னவன் ... சுந்தரன் - அவர் பெயர்
ஆலாலசுந்தரர் என்பதாம்; முன்னம் ... சூழலில் - முன் ஒரு நாள்
கயிலையில் இறைவனுக்குச் சாத்துவதற்காக விதிப்படியுள்ள புதுப்
பூக்களைக்கொய்து எடுக்கும் பொருட்டுத் திருநந்தன வனத்திலே
அவர் சேர்ந்தனர்.
(வி-ரை.)
ஆலால சுந்தரன் - ஆலகால விடத்தைச் சிறிதளவாகச் செய்து கையிலே ஏந்திச் சென்று
சிவபெருமானிடத்துக்
கொடுத்தமையால் இப்பெயர் வந்தது.
“அன்ன
சுந்தரற் காலால மாழியின்
முன்னம் முன்னவ னுண்ணமற் றன்னதைத்
தன்ன கங்கைத் தழீஇக்கொடு நல்கலாற்
றுன்னு மாலால சுந்தர நாமமே” |
என்பது பேரூர்ப் புராணம்.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறும்பொருட்டுத்
திருப்பாற்கடல் கடைந்ததுவும், அதுகாலை ஆலகால விடம்
எழுந்ததுவும், அப்போது தேவர்களைக் காக்கவேண்டி அதனைச்
சிவபெருமான் உண்டருளியதோடு சாட்சியாக யாவரும் கண்டு
தொழுது உய்யவேண்டிக் கழுத்தின் அளவிலே விளக்கமாக
நிறுத்தியதுவும், பிறவும் சிவ - விஷ்ணு - பிரம
- முதலிய
மாபுராணங்கள் எனும் பதினெண் புராணங்களும் பேசும். ஆதலின்
அது எம்மதத்தரும் சம்மதிக்கும் விளக்கமான உண்மையாம்.
நாண்மலர்
- அன்றலர்ந்த புதுமலர்.
இன்ன
ஆம் எனும் - இவை இவை பெருமானுடைய பூசைக்கு ஆகும் என்று விதிக்கப்பெற்ற. இவ்விதிகள்
புட்பவிதி முதலியவற்றுட்
காண்க. (வரும் பாட்டிலும் இவ்வாறே கொள்க.)
அன்னவன்
பெயர் ஆலால சுந்தரன்; முதல்வன் தனக்குஆம்
மலர் கொய்திட நந்தனவனச் சூழலில் (அவன்) துன்னினான் - எனக்
கூட்டி முடிக்க.
கொய்திட
- கொய்து வந்து இட. (வரும் பாட்டிலும் இவ்வாறே
கொள்க.) நந்தனவனச்சூழல் - சூழல் (காவல்) பெற்ற நந்தனவனம்
என்க. 22
|