| 325. 
              | 
           
            மன்னும் புகழ்நா வலர்கோன் மகிழ  
                 “மங்கை பரவை தன்னைத் தந்தோம்; 
             
             | 
            | 
         
         
          |   | 
           
             இன்னவ் வகைநம் மடியா 
              ரறியும்  
                   படியே யுரைசெய் தன; “மென் றருளிப்  
              பொன்னின் புரிபுன் சடையன் விடையன்  
                   பொருமா கரியின் னுரிவை புனைவான்  
              அன்னந் நடையாள் பரவைக் “கணிய  
                   தாரூ ரன்பான் மண“மென் றருள,  
           | 
          179 | 
         
       
           (இ-ள்.) 
        மன்னும்......அருளி 
        - “மங்கைபரவையை உணக்கு  
        நாயகியாகக் கொடுத்தோம். இவ்வாறு நாம் கொடுத்தருளிய  
        செயலைத் திருவாரூரிலே வாழும் நமது அடியார்கள் அறியும்படியும்  
        அருளிச் செய்துள்ளோம்.“ என்று நிலைத்த புகழுடையாராகிய  
        திருநாவலூர் நம்பிகள் மகிழுமாறு அவர் அறியும்படி அருளிச்செய்து  
        (பின்னர்); பொன்னின்......அருள - பொன்னைப் புரிசெய்தாற்போன்ற  
        சடையினையும், இடபத்தினையும், போர்வல்ல பெரிய  
        யானைத்தோலின் போர்வையினையும் உடைய தியாகேசப்பெருமான்  
        பரவையாரது கனவிலும் எழுந்தருளி “நம்பியாரூரனுக்கும் உனக்கும்  
        மணம் விரைவிலே நிகழ்வதாம்“ என்று அருளிச்செய்ய, 
         
         
             (வி-ரை.) 
        மங்கை பரவை - பரவையாராகிய மங்கை.  
        மங்கைப் பருவத்தைக் குறித்ததுமாம். பெண்களுக்குப் பன்னீராண்டு  
        மணப்பருவமாதல் இலக்கணத்துட்காண்க.  
         
              தந்தோம் 
        - யாவரையும் அடிமையாகக் கொண்ட பொது  
        உரிமையே யன்றிப் பரவையார் உருத்திர கணிகையாராதலின்  
        அவரைக் கொடுக்க உருத்திரராகிய தமக்குச் சிறப்பு உரிமையும்  
        ஆதல் குறித்தப்படி. 
         
              நம் அடியார் அறியும்படியே 
        உரை செய்தனம் -  
        பரவையைக் கொடுத்தோம் என்ற மாத்திரத்தானே மகட்கொடை  
        நிகழ்ந்து முற்றியது. பெற்றோர் தரச் சுற்றத்தரார் கல்யாணச்  
        சடங்குகளை முடிக்கும் வகையிலே, சடங்குகளை முடிக்கும்படியாக  
        அடியார்களுக்குத் தெரிவித்தோம் என்றபடி. தந்தோம் என்ற  
        மகட்கொடையை உலகிலே நிகழச் செய்விக்கும் வழியை ஆரூரர்க்கு  
        வகுத்துக் காட்டியவாறு. புனைவான் - என்ற இப்பாட்டின் ஒரே  
        எழுவாய் “என்றருளி“ - “என்றருள“ என இருவகையிலும் பொருந்தி 
         
        முடிபுகொண்டவாறு காண்க. அவ்வொருவரே இவ்விருவரையும் பற்றி  
        நின்று கூட்டுவித்து அருள்செய்யும் அருளமைதியின் குறிப்பு.  
         
             பொன்னின்........புனைவான் 
        - பரவையார் இவரது  
        திருவுருவை நினைந்து நினைந்து கவன்ற அவ்வுருவோடு காட்சி  
        யளித்தார் என்பது குறிப்பு. 323-வது திருப்பாட்டுக் காண்க.  
        “ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே, அவ்வுருவாய் நிற்கின்ற  
        அருளுந் தோன்றும்“ என்பது தேவாரம் (திருப்பூவணத்  
        திருத்தாண்டகம் - 10). 
         
              பொன்னின் புரி 
        புன்சடை - பொன்னாற் புரித்ததுபோல  
        நிறமும் ஒளியும் வடிவு முடைய சிறுசடை. “பொன் நவில்  
        புன்சடையா னடியில் நீழல்“ என்ற வாசீசர் திருவாரூர் அரநெறித்  
        தேவாரம் காண்க. “பொன்புரிந்த புன்சடைக்கு“ - குமரகுருபரர். 179 
	 |