326.
|
காமத்
துயரிற் கவல்வார் நெஞ்சிற்
கரையில் லிருளுங் கங்குற் கழிபோம்
|
|
|
யாமத்
திருளும் புலரக் கதிரோ
னெழுகா லையில்வந் தடியார் கூடிச்
சேமத் துணையா மவர்பே ரருளைத்
தொழுதே திருநா வலர்கோன் மகிழத்
தாமக் குழலாள் பரவை வதுவை
தகுநீர் மையினா னிகழச் செய்தார்.
|
180 |
(இ-ள்.)
காமத்துயரில் ...... புலர - ஒருவரை யொருவர்
காதலித்து அது கை கூடி முற்றுப்பெறாத துன்பத்தால் தனித்தனி
வருந்திய நம்பிகள், பரவையார் எனும் இருவருடைய நெஞ்சில்
நிறைந்து முடிவின்றி யிருந்த ஆற்றாமையாகிய இருளும், அவ்விரவு
மெல்லக் கழிந்து செல்லும் யாமங்களாகிய இருளும் நீங்க;
கதிரோன்......தொழுதே - சூரியன் உதிக்கும் காலமாகிய
அதிகாலையில் கனவில் உணர்த்தியருளப் பெற்ற திருவாரூர்
அடியார்கள் எல்லாரும் கூடித், தம் அடியார்களுக்கு உற்றவிடத்
துதவும் வைப்பாகிய - துணையாகிய தம்பெருமானது பேரருளைத்
தொழுது வாழ்த்தி; திருநாவலர்கோன்........நிகழச் செய்தார் -
திருநாவலூர் நம்பிகள் மகிழுமாறு மாலையணிந்த கூந்தலுடைய
பரவையாரது கல்யாணத்தை அதற்குத் தக்க சிறப்பினாலே
நிகழ்வித்தார்கள்.
(வி-ரை.)
காமத் துயரிற் கவல்வார் - உலகில் பிறர்
கவன்றுழலும் காமத் துயர்போல அவற்றுடன் ஒன்றாக வைத்து இது
மயங்கி யுரைத்தற்பாலதன்று. முன் தொடர்புபற்றி இது அருள்
வகையால் தொடர்ந்து வருதலால் என்பது.
கரையில் இருளும்
- இது கைக்கிளைக் காதற் பெருக்கு.
இருள் என உருவகப்படுத்தப் பெற்றது. இவர்களது மனத்திலே
பெருமானது நினைவு நின்றிருந்தபடியால் இது அகவிருள் அன்று.
திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலே,
நீறணிந்தார்
அகத்திருளும் நிறைகங்குற் புறத்திருளும்
மாறவரும் திருப்பள்ளி யெழுச்சி |
என்றதனோடு இதனை ஒத்துப்
பார்க்க. மாக்கள் சிந்தையுட் சார்ந்து
நின்ற, பொங்கிய இருள் என்று கூறியதும் (10) காண்க.
கங்குல் கழிபோம்
யாமத்து இருளும் புலர - புலரும்
படியன்று இரவு என்று பரவையார் கூறி வருந்தியதாகிய
அவ்விருளும் புலர என்க. இரவு ஒவ்வோர் யாமமாகக் கழிய இருள்
புலர.
கதிரோன் எழுகாலை
- கங்குல் இருள் புலரவும், கதிரவன்
எழவும் உள்ளதாகிய அதிகாலை என்க. எனவே அடியார்கள்
தாந்தாங் கண்ட கனாக்களை எண்ணி, அது கண்டபின், தமது முதற்
கடமையாக, அதிகாலையிலேயே கூடித் தொழுதனர். எழுகாலை -
எழுந்து வரும் என எதிர் காலமானதால் இன்னும் சூரியன்
உதயமாகவில்லை; அவன் எழும் செயல் இருள் போதலால்
விளங்கிற்று என்னும் செயல் குறித்தது.
சேமந் துணையாம்
அவர் - அடியவர்க் கெய்ப்பினில்
வைப்பு, அடியவரெய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த, நிதியே
(பதினொராந் திருமுறை) என்பன வாதி திருவாக்குகள்
காண்க. சேமம் - சேர்த்து வைத்த உலவாக்கிழி - சேமம் செய்யும்
துணை என்றலுமாம். அடியார் நெஞ்சிற்சேமித்து (புதைத்து) வைத்து,
வேண்டும்போது உதவும்படி எடுக்க அருள்பவர்.
தகுதீர்மை
- அருளுக்கும், அவருக்கும், தமக்கும் தகுந்த
தன்மை. திருநாவலூர் கோன் - தாமக்குழலாள் - இவற்றில் திரு,
தாமம் என்ற அடைமொழியின் மங்கலக் மணக்கோலத்தின்
நிலையைக் குறித்தன. 180
|