360.. |
வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து
வந்தார்
மாதொரு பாக நோக்கி மல்குசிற் றம்ப லத்தே ஆதியு முடிவு மில்லா வற்புதத் தனிக்கூத்
தாடு நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடு நலத்தின்
மிக்கார்; |
1 |
(இ-ள்.)
வேதியர்....வந்தார் - மேலே விரித்துச்
சொல்லிய
அந்தணர்கள் வாழ்கின்ற தில்லை என்கின்ற தொல்பெரும் பதியிலே
அவதரித்தவர்; மாது..........மிக்கார்
- உமையம்மையா ரமர்ந்த ஒரு
பாகத்தை நோக்கிக்கொண்டு, நிறைந்த திருச்சிற்றம்பலத்தி னிடமாக
நின்று, ஆதியுமந்தமுமில்லாத அற்புதத் தனித் திருக்கூத்தினை
ஆடுகின்ற இறைவனது திருவடிகளையே போற்றி வழிபட்டு வருகின்ற
நல்லொழுக்கத்திலே தலைசிறந்தவர்.
(வி-ரை.)
வேதியர் தில்லை மூதூர் - நாயனாரது
சரிதத்திற்குரிய நாட்டுச் சிறப்பும், நகரச்சிறப்பும், அதன் குடிச்சிறப்பும்
உரைத்ததுடன் முன் புராணத்திற் கூறிய பொருளைத்
தொடர்ந்துகொண்டு அந்த வேதியா என அனுவதித்து
எடுத்துக்கொண்டதுமாம். மூதூர் - பழம் பதி.
வேட்கோவர்
- குயவர். மண்ணிலே குல உரிமைத் தொழில்
செய்பவர் என்பது பொருள்.
மாதொருபாக நோக்கி
- அம்மையார் இருக்கும்
இடப்பாகத்தைத் திருவருளினாலே நோக்கம்செய்து கொண்டு.
நோக்கி ஆடும் நாதனார் என முடிக்க. “வலப்பானாட்டமிடப்
பா னோக்க“ என்பது திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (1).
நோக்குதல் - அருளினை அம்மையார் வழியே
உயிர்க்குழவிகள்
பெற்றுய்யும்படி பார்த்தல். ஒரு பாகம் - ஏற்புழிக்கோடல் என்ற
விதியால் இங்கு இடப்பாகம் என்று கொள்க.
மல்கு சிற்றம்பலம்
- எங்கும் - என்றும் நிறைவுற்ற ஞானாகாயம்.
ஆதியும் முடிவுமில்லா
- இன்னகாலத்திலே, இன்ன
இடத்திலே தோன்றிற்று - முடிவுபெறும் என்பதில்லாத -
காலத்தையும் இடத்தையும் கடந்த. ஆதியுமுடிவு மில்லாத கூத்து
-
என இயையும்.
கூத்து
- ஐந்தொழிற் றிருக்கூத்து. இது என்றும் நித்தியமாய்
உள்ளது. “திகழ்பதியாம் ஈசனது நடத்தொழிலும்....அனாதி“ என்றனர்
உமாபதி சிவாசாரியார்.
ஆதயு முடிவு மில்லா
நாதனார் - என்று
கூட்டியுரைத்தலுமாம். அற்புதம் - தனி - என்பன
கூத்திற்குரிய
அடைமொழிகள். அற்புதம் - 351ம் பாட்டிற் காண்க. அற்புதம்
ஞானமுமாம். தனி - தனி முதல்வன் இயற்றுவதாலும், பிறர்
இயற்றுதற்கியலாமையாலும் தனி என்றார்.
இக்கூத்தின் இயல்பு
முன்னர் உரைக்கப்பட்டது.
வாழ்த்தி
- “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்“
என்றபடி, “நாதன்றாள் வாழ்க“ என வாழ்த்துதல் திருவடிக்கீழ்
வாழும் வாழ்வருளும் பொருட்டு.
நலம்
- வீடுபேறு. நலந்தருவதனை நலமென்றது உபசாரம்.
இவ்வழிபாடு ஒன்றே நலந்தருவதாம் என்றதாம். இப்பாட்டினுக்குத்
தொண்டர் என்று மேற்பாட்டிற் கூறிய அவர் என எழுவாய்
வருவித்துக் கொள்க.
மன்னுசிற்றம்பலத்தே
- என்பதும் பாடம். 1
|