37.
|
ஆதி மூர்த்தி
யவன்றிற நோக்கியே
|
|
|
மாதர்
மேன்மனம் வைத்தனை; தென்புவி
மீது தோன்றியம் மெல்லிய லாருடன்
காத லின்பங் கலந்தணை வரயென. |
27 |
(இ-ள்.)
ஆதி ... நோக்கியே - இறைவன் ஆலாலசுந்தரரது
செய்தியைக் கண்டவராய்; மாதர்மேல் ... அணைவாய்
என - நீ
பெண்களின்மேல் மனம் போக்கிவைத்தாய். ஆதலால்
தென்றிசையிலே அவதரித்து அந்த மாதர்களிடம் இன்பம் நுகர்ந்து
பின்னர் இங்கு வந்து அணைவாயாக என்று அருளினார். அருளவே;
(வி-ரை.)
ஆதிமூர்த்தி - எல்லாவற்றிற்கும் மூலகாரணனாக
நின்ற மூர்த்தி; சிவபெருமான். அந்தம் ஆதி என்மனார் என்பது
சிவஞானபோதம் முதற்சூத்திரம்.
அவன்திறம் - அவர் மாதர்மேல் மனம் போக்கிய
காட்சி.
மனம் வைத்தனை - மனம் போக்கினாய் என்ற குறிப்பு.35
பார்க்க. இவர்கள் பெண்கள் என்ற எண்ணம் வைத்து நோக்குதலே
இங்கு மனம் வைத்தல் எனப்பட்டது.
நோக்கி - அறிந்து, தம்மையும் நோக்கிக்
கண்டு என்ற
அப்பர் சுவாமிகள் தனித் திருநேரிசையும் காண்க. இறைவர்
சர்வஞ்ஞராதலின் தமது எங்கும் நிறைந்த எல்லா மறியும்
அறிவினாலே அறிந்தார். சகஸ்ர சீரிஷ : புருஷ : சகஸ்ராட்ச
என்பது உபநிடதம்.
அருள்
எங்குமான வளவை யறியார்
அருளை நுகரமு தானதுந் தேரார்
அருளைங் கருமத் ததிசூக்க முன்னார்
அருளெங்குங் கண்ணான தாரறி வாரே,
- திருமூலர் - 7, திருவருள் வைப்பு - 7 |
காதலின்பம்
- பொருள்களின்மேல் வைத்த இச்சை காதல்;
அந்த ஆசை காரணமாக அப்பொருள்களைப் பெற்று நுகரப்படுவது
இன்பம்; காதல் - இங்குத் தலைவன் தலைவியர்க்குள் நிகழும் அன்பு
குறித்தது.
காதலின்பம்
- காதலிக்கப்பட்ட பொருளாற் பெறப்படும்
இன்பம்.
கலந்து அணைவாய்
- இன்பம் கலந்து அதன்பின்
மீண்டும் இங்கே அணைவாய் - வந்து சேர்வாய். இந்த
ஆணையின்படியேதான் அவரும்க்காரியம் முற்றி மீண்டு
அணைகின்றார் என்க. எந்தையார் அருளால் அணைவான் என
(17) என்று முன்னர்க் கூறியது காண்க.
என - என்று ஆணையிட. மனம்
வைத்தனை ஆதலின்
தோன்றிக் கலந்து அணைவாய் என்று அருள என முடிக்க. 27
|