374.
|
எம்பிரான்!
யான்செயும் பணியெ? தென்றனர்
|
|
|
வம்புலா
மலர்ச்சடை வள்ள றொண்டனா;
ரும்பர்நா யகனுமிவ் வோடுன் பால்வைத்து
நம்பி!நீ தருகநாம் வேண்டும் போ தென்று,
|
15 |
(இ-ள்.)
வெளிப்படை. எமது நாயகரே! இனி யான்
செய்யக்கடவதாகிய பணிவிடை யாது? அருளிச் செய்தல் வேண்டும்;
என்று வாசனைவீசும் கொன்றை மலர் தரித்த சடையையுடைய
வள்ளலாகிய சிவபெருமானது தொண்டனார் சொன்னார்; தேவ
தேவனாகிய சிவயோகியாரும் நம்பியே! இந்த ஓட்டினை
நீ உன்னிடம் வைத்திருந்து நாம் வேண்டும்போது மீளத்
தருவாயாக! என்று சொல்லி,
(வி-ரை.)
எம்பிரான்! - எங்கள் பெருமானே!
- நாயகரே! -
அண்மைவிளி.
யான் செயும் பணி எது
- செயும் பணி - தேவரீர்பாற்
செய்யக்கடவதாகிய பணி. பணி எது - நூல்கள்
மொழிந்த பூசைகள்
யானறிவகையா லியற்றினேன்; மேற்செயத்தக்க பணி மொழிந்தருள்க
என்றபடி. தேவரீர் என்னிடம் வேண்டியது யாது என்பதற்கு நான்
செயும்பணி யாது என்றது பெரியோர்களிடம் விண்ணப்பிக்கும்
சம்பிரதாயமான மரியாதைக் கூற்று.
வம்புலா மலர்
- இடத்திற் கேற்ப மலர் என்ற பொதுப் பெயர்
கொன்றை குறித்தது.
வள்ளல்
- தலைவரே அடியார் வேடம்பூண்டு வந்தருளியதால்
வள்ளல் என்றார்.
வைத்து உன்பால் நம்பி!
நீ தருக நம்பி - ஆடவரிற்
சிறந்தவனே! - அண்மைவிளி. நம்பிக்கைக்குப் பாத்திரமானவன்
ஆதலின் உன்னிடம் ஒப்புவிக்கின்றேன் என்பது குறிக்க இப்பெயராற்
கூறினார். நம்பி வைத்தும் - நம்பிக்கையாக
வைக்கின்றோம் -
என்பது இராமநாதச் செட்டியார் உரைக் குறிப்பு. 15
|
|
|
|