381.
|
மறையவ
னாகி நின்ற மலைமகள் கேள்வன்
றானும்
|
|
|
உறையுளிற்
புக்கு நின்ற வொருபெருந் தொண்டர்
கேட்ப
இறையிலிங் கெய்தப் புக்காய்! தாழ்த்ததென்?
னென்ன,
வந்து
கறைமறை மிடற்றி னானைக் கைதொழு துரைக்க
லுற்றார்,
|
22 |
(இ-ள்.)
மறையவனாகிய....என்ன - மறையவர் வேடந் தாங்கி
வந்து நின்ற பார்வதி பாகனாகிய அவரும், வீட்டினுள்ளே புகுந்து
மேற்சொன்னவாறு மயங்கி நின்ற ஒப்பற்ற பெரிய தொண்டர்
கேட்கும்படி விரைவில் இங்குத் திரும்பி வர உள்ளே புகுந்தவனே!
இவ்வளவும் தாமதித்த காரணமென்ன? என்று உரக்கக் கூவ;
வந்து...உற்றார் - உடனே (அத்தொண்டனார்) வெளியே திரும்பிவந்து,
விடக்கறுப்பை மறைத்த மிடறுடைய யோகியாரைக்
கைகூப்பித்தொழுது; பின் வருமாறு சொல்வாராயினார்.
(வி-ரை.)
மறையவன் - தனது உண்மைத் தன்மையை
மறைத்து வந்தவன் என்பதும் குறிப்பு. நின்ற - எங்கும் நிறைந்து
நின்ற என்பதும் குறிப்பு. நின்ற திருத்தாண்டகம் காண்க.
மலைமகள் கேள்வன்
-இப்போது யோகியாய் வந்தாராயினும்
பின்னர் உமையம்மையாருடன் வந்து அளவிலின்பத்திருத்துபவர்
என்பது குறிப்பு.
உறையுள்
- வீட்டிற்குள் அவ்வோட்டினை வைத்த காப்புறு
மெல்லை.
நின்ற
- நின்ற கேள்வன் நின்ற தொண்டர் கேட்பக் கூறினார்
என்றதொரு நயமும் காண்க.
இறையில் இங்கு எய்தப்
புக்காய் - இறையில் - மிக
விரைவில். எய்த - மீள வருதற்காக. வருவான்போல என்றலுமாம்.
வருகின்றேனென்று சொல்லி என்பாருமுண்டு. புக்காய் -புகுந்தவனே!
விளி; புகுந்தவனாகிய நீ என்றலுமாம்.
என்ன
- உரத்துக் கூவ. தந்து நில் என முன்னர் விரைந்து
கூறியதற்கேற்ப உரைத்துக் கொள்க. பின்னரும் இவ்வாறே
செயிர்த்து நோக்கி (383) எனவும், பழிக்குநீ யொன்று நாணாய்
(385) எனவும், சிந்தைவலித்திருக்கின்றாய் (389) எனவும் கூறுவன
காண்க.
வந்து
- தவசியார் நின்ற இடத்தில் மீள வந்து.
கறை மறை மிடற்றினான்
- தாம் காதலித்து எப்போதும்
சொல்லிப் பத்தி செய்து ஏத்தி வந்த திருநீலகண்டத்தை மறைத்து
வந்தவன். அதன்பால் வைத்தபத்தியின் உறைப்பினாலே
வெளிவந்ததாயினும் சிறிது போழ்து மறைந்து நின்றதாதலின்
மறைமிடறு என்றார். கண்முன் வருதியானப் பொருள் (திருஞான -
புரா - 265) என்றதும் காண்க.
உரைக்கலுற்றார்
- உரைப்பாராகி; முற்றெச்சம். என்று
இறைஞ்சி நின்றார் - என்ற வரும்பாட்டின் வினைமுற்றுக் கொண்டு
முடிந்தது. தொண்டர் என்ற எழுவாய் வருவித்துரைக்க. 22
|