407.
|
ஆயு நுண்பொரு
ளாகியும் வெளியே
|
|
|
யம்ப லத்துநின் றாடுவா ரும்பர்
நாய கிக்குமஃ தறியவோ? பிரியா
நங்கை தானறி யாமையோ? வறியோந்
தூய நீறுபொன் மேனியில் விளங்கத்
தூர்த்த வேடமுந் தோன்றவே தியராய்
மாய வண்ணமே கொண்டுதந் தொண்டர்
மறாத வண்ணமுங் காட்டுவான் வந்தார்.
|
4 |
(இ-ள்.)
ஆயும்...ஆடுவார் - சிவஞானத்தானாராய்தற்குரிய
மிக்க நுண் பொருளே யாகியும் யாவருங் காண வெளிப்படையாய்த்
திருச்சிற்றம்பலத்தில் நின்று ஆடுகின்ற; உம்பர்
நாயகிக்கும்...அறியோம் - மேலாந் தலத்தில் விளங்குகின்ற தமது
நாயகியாராகிய உமாதேவியார் தாம் இவ்வாறு கோலங்கொண்டு
வந்து செய்யும் செயலை அறியும்படியாகவோ?; அல்லது அவர்
அதனை அறியாத வகையிலோ?; இன்னவாறென்று நாம் அறியோம்;
தூய...வேதியராய் - தூயதாகிய திருநீறு
தமது
பொன்மேனியிலே விளக்கம் பெறவும், (அதற்கு மாறாகத்) தூர்த்த
வேடமும் அத்திருமேனியிலே வெளிப்படையாய்த் தோன்றவும், ஒரு
வேதியராக உருவங் கொண்டு; மாய..வந்தார்
- தமது மறைப்பினிற்
போந்த உருவத்தினையே மேற்கொண்டு(உலகத்தார் காண அதனைக்
காட்டுதலே யன்றித்) தமது தொண்டராகிய இயற்பகையார் அடியவர்
வேண்டியவை எவையேயாயினும் இல்லை யென்னாது கொடுக்கும்
இயல்பினையும் காட்டும் பொருட்டு வந்தார்.
(வி-ரை.)
ஆயுநுண்பொருளாகியும் - ஆய்ந்து
ஆய்ந்து
அறியத்தக்க நுண் பொருளாய் எஞ்சிச் செல்லும்
தன்மையுடையராகியும். ஆகியும் வெளியே ஆடுவார் என்று கூட்டுக.
அணோ
ரணீயாந் - வேதம்.
பாதாள
மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியு மெல்லாப் பொருண்முடிவே
- திருவாசகம்
அணுவோ ரண்டமாஞ் சிறுமை கொண்டு
-
திருவிசைப்பா |
என்பன தமிழ் வேதம்.
அணுக்க
ளெல்லாம் அண்டங் களாக
- திருவிளையாடற்புராணம். |
ஆயும்
- இஃது ஆணவ சொரூபமான யான் எனது என
உயிரறிவுகொண்டு, ஆராய்கின்றேன் - அறிகின்றேன் - என்னும்
ஆராய்ச்சியன்று. ஆணவத்தை முற்றிலும் அடிப்படுத்தி அவன்
அறிவிக்க அறிகின்றேன் - என்னும் பரஞான சிற்சத்தி ஒளியின்
உதவியால் அறிகின்ற ஆராய்ச்சி இங்குக் கருதப்பெற்றது.
அருளும்
வண்ணமும் மாதி மாண்புங் - கேட்பான் புகிலள
வில்லை
ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச் - சோதிக்க
வேண்டா |
என்னும் திருப்பாசுரங்களின்
விரிவுரையில்,
ஓது
மெல்லை யுலப்பில வாதலின் - யாது
மாராய்ச்சி யில்லை- திருஞான - புரா - 833 |
இன்ன
தன்மை யேது எடுத்துக்காட் - டன்ன வாற்றா
லளப்பிலன்- மேற்படி - 835 என்று ஆசிரியர் அருளியமை காண்க.
ஆய்தல்...உள்ளதனுணுக்கம் என்று தொல்காப்பியர் கூறலின் மிக்க
நுண் பொருளாகியும் என்றுரைத்தலுமாம்.
ஆகியும்
- ஆடுவார் - மனம் வாக்குக்களுக் கெட்டாததாயும்
சிவஞானத்தால் அறியப்பெறுவதாயும் உள்ள நுண் பொருளேயாயினும்
திருவம்பலத்தினிடத்தே தாமாக வெளிப்பட்டு எல்லா உயிர்களும்
உய்யுமாறு அருட் கூத்தாடுவார். உலகெலா முணர்ந்தோதற்
கரியவன்..அம்பலத் தாடுவான் என இப்புராணத் தொடக்கத்திற்
கூறியது காண்க. அரங்கிடை நூலறிவாள ரறியப்படாத தோர்
கூத்து - (திருவதிகை - காந்தாரம் - 6) என்ற அப்பர் பெருமான்
தேவாரமுங் காண்க.
ஆராய்வார் காணாமை நுண் பொருளாகியும், அங்ஙனம்
ஆராய்ச்சி செய்யாது பணிவார் காண வெளிப்பட அம்பலத்து
ஆடுவார் என்று உரை கூறுவர் ஆலால சுந்தரம் பிள்ளை அவர்கள்.
உம்பர் நாயகிக்கும்...அறியோம் - இது
கவிக்கூற்று. இங்கு இறைவன்
திருமேனி தாங்கிவரும் இயல்பினைப்பற்றி முன் ஆயுநுண்
பொருளாகியும் என்றதற்கேற்ப ஒர் ஆராய்ச்சி செய்கின்றார். இவர்
திருமேனி தாங்கி வருவதில் ஒன்றற்கொன்று மாறுபட்ட
இவ்விரண்டியல்புகள் காணப் பெறுகின்றன; ஆயுநுண் பொருளாவார்
வெளியே யாடுவாருமாயினர்; ஓருருவு மில்லார் ஒரு வேடங்
கொண்டார். தூர்த்த வேடமுடைய பொன்மேனியில் தூய நீறும்
விளங்கிற்று; இவர்தாம் இவ்வாறு வருங்கால் தமது பங்குடைய
உமையம்மையார் அறிய வந்தனரோ? அன்றி அறியாமை
வந்தனரோ? எனின் அறிய வருவாராயின், இவர் இங்குப் பிறர்
மனைவியாரை வேண்டிச் செல்வதற்கு அவர் உடன்பட்டிரார் அவர்
அறியாது வந்தாரெனின் உடன் பிரியாது இருப்பாராதலின்
அஃதுமியலாது; ஆதலின் இதனை இன்னவாறெனத் துணிய
அறியோம் என்றார்.
அருட்சத்தியும் திரோதான சத்தியும் ஒருங்கே தொழிற்பட்டன
என்ற கருத்தால் இவ்வாறு கூறப்பெற்றது போலும்.
நாயனார் இயற்பகையாராயினமையால் தாமும் தமது இயலுக்கு
மாறாக இத்தன்மையில் வெளிப்பட்டு அருளினர் என இங்கு நினைவு
கூர்ந்தவாறாம்.
தம்மேலைச்
சார்புணர்ந்தோ? சாரும்பிள்ளைமை
தானோ? -
திருஞான - புரா - 63 |
ஆய
பொழுது தம்பெருமா னருளா லேயோ? மேனியினில்
ஏயு மசைவி னயர்வாலோ? வறியோம் -
நமிநந்தி - 26 |
என்றிவைபோலப் பின்னர்க்
கூறுவனவற்றையும் இங்கு வைத்து
ஒப்புநோக்குக.
தூயநீறு
- சுத்தம தாவது நீறு என்றவாறு தான்
தூய்மையுடையதாகும். அதனோடு யாவற்றையும் தூய்மை
செய்வதுமாம்.பொன்மேனி - அழகிய மேனி.
பொன் போன்ற மேனி
என்றலுமாம்.பொன்னார் மேனியனே, பொன்வண்ண மெவ்வண்ண
மவ்வண்ண மேனி - என்பனவாதி திருவாக்குக்கள் காணக
தூர்த்தவேடமுந் தோன்ற - அதனோடு அதற்கு மாறாகத்
தூயதல்லாத தூர்த்த வேடமும் ஒருங்கே காண. உம்மை இழிவு
சிறப்பு.
தூர்த்த வேடம்
- பரஸ்திரீ கமனம் செய்யும் காமந்தோன்றும்
அடையாளங்கள் விளங்கும் கோலம். அவை நகக்குறி
- பற்குறி -
மஞ்சட்பூச்சுக்குறி முதலியன. தூர்த்தன் -
காமவசப்பட்ட இயல்புடன்
இழிந்த செயல் செய்பவன். தூர்த்த வேடத்தின் இழிபினைப் போக்க
அதற்குப் பரிகாரமாக அந்த மேனியிலே நீறு அணிந்ததுபோல என்ற
குறிப்புமாம்.
வேதியராய்
- இவ்வேடங்கொண்டு இச்செயல் புரிவதும்
இவர்க்கே உரியது என்று காட்டுவார் வேதியரானார் போலும்.
மாய வண்ணமே கொண்டு
- பிறாறிய இயலாதபடித் தம்மை
மறைத்துக் கொண்ட இவ்வுருவந் தாங்கிக்கொண்டு அதனைக்
காட்டுதலேயன்றி. மாயம் - வஞ்சனை; மறைவு.
மறாத
வண்ணமும் - வேண்டும் யாவையும்
இல்லையென்னாதே முன் கொடுக்கும் இயல்பினையும். தமது மாயை
வண்ணத்தைக் காட்டுதலேயன்றி மறாத வண்ணத்தையும் - என -
உம்மை இறந்து தழுவிய எச்சவும்மை.
காட்டுவான்
- உலகத்தார்க்குக் காட்டி அடியார் பெருமையை
அறிவுறுத்தி உய்விக்கும்பொருட்டு. (369) உரை காண்க. (அவர் -
இயற்பகையார்). அருளால் - முடித்து - பெருமையே
- எனப் பேணி
வாழ்நாளில் - ஆடுவார் - விளங்கத் - தோன்ற
- வேதியராய்க் -
கொண்டு காட்டுவான் - வந்தார். (அவ்வாறு வந்தது) நாயகி
அறியவோ அறியாமலோ அறியோம் - என இவ்விரண்டு
பாட்டுக்களையும் தொடர்ந்து கூட்டி முடிக்க.
ஆய நுண்பொருள்
- மாயைவண்ணமே - என்பனவும்
பாடங்கள். 4
|