| 416. 
             | 
           மனைவியார் 
            சுற்றத் தாரும் வள்ளலார் சுற்றத்  
                                               தாரும் 
             
             | 
            | 
         
         
          |   | 
          இனையதொன் 
            றியாரே செய்தா?ரியற்பகை பித்த 
                                              னானாற் 
             
            புனையிழை தன்னைக் கொண்டு போவதா  
                                     மொருவ? 
            னென்று  
            துனைபெரும் பழியை மீட்பான் றொடர்வதற்  
                                     கெழுந்து 
            சூழ்வார்,  
             | 
          13 | 
         
       
       
           (இ-ள்.) 
      மனைவியா...என்று - மனைவியாராகிய அம்மையாரது  
      சுற்றத்தார்களும், வள்ளலாராகிய நாயனாரது சுற்றத்தார்களும் இது  
      போன்றதொரு செயலை யார்தான் இதுவரைச் செய்தர்கள்? வேறு  
      ஒருவரும் செய்யாத செய்கை செய்யுமாறு இயற்பகை பித்தம்  
      கொண்டு விட்டானானால் அது காரணமாக மனைவியாரைக்  
      கொண்டு ஒருவன் போய் விடுவதாகுமா? என்று கருதி;  
      துனை...சூழ்வார் - இச்செயலால் உற்ற பெரும் பழியினின்றும்  
      மீட்பதற்காக அவரைப் பற்றித் தொடர்வதற்குக் கூடி எழுந்து  
      சூழ்வார்களாகி,  
       
           (வி-ரை.) 
      வள்ளலார் - கொடுத்தற்கரிய 
      மனைவியைக்  
      கொடுத்தும் விடுத்தும் புரிந்த கொடைச் சிறப்பு நோக்கி இங்கு  
      வள்ளலார் என்ற பெயராற் கூறினார். வள்ளல் - 
      வரையாது  
      கொடுப்போன். அதனினும் மிக்க சிறப்புத் தோன்ற, வள்ளல்  
      என்றமையாது, பன்மையாக்கி வள்ளலார் என்றார். 
       
           பித்தனானால் 
      - நாட்டவர் பிறரெவரும் செய்யாத பழிச்  
      செயலைக் கூசாது வெளிப்படையாய்ச் செய்த அதனால் அவன்  
      பித்தனேபோன்றனன்; அவ்வாறு அவன் பித்தனேயாயினும். 
       
           புனையிழை 
      - இழை - இழைக்கப்பட்டது. செயப்படுபொருள்  
      விகுதி குன்றியது. புனையிழை - அணிகள் புனைந்து 
       
      அம்மையாரைக் குறித்த அன்மொழித் தொகை. 
       
           வணிகர்களாயினமையின் அணிகளின் விலையைக்  
      கருதினார்கள் என இங்கு விசேடவுரை காண்பாரு முண்டு. பின்  
      நிகழ்ச்சிகளால் ஆசிரியர்க்கேனும், சுற்றத்தார்க்கேனும் அது  
      கருத்தன்றென்று விளங்கும்.பழி போக்குவதே அவர்கள் கருதியதாம். 
       
           துனை பெரும் பழியை 
      - துனை - துன்னுவதாகிய (துன் -  
      பகுதி); பழியை - பழியினின்றும். வேற்றுமையுருபு மயக்கம். மீட்பான்  
      - மீட்பதற்கு - மீட்கும் பொருட்டு பானீற்று வினையெச்சம்  
      பழியினின்றும் நாயனாரையும் மனையிாரையும் குலத்தையும் மீட்க -  
      விடுவிக்க. பழிவிட (418) என்று கூறுவது காண்க. 
       
           சூழ்வார் 
      - முற்றெச்சம். சூழ்வார் - எதிர்வளைத்துக் 
       
      கொண்டார் என முடிக்க.  
       
           யாரேசெய்தார் 
      - ஒருவரும் செய்தாரிலர். வினா எதிர்மறைப்  
      பொருளில் வந்தது.  13 
   |  
 
 |   
				
				 | 
				 
			 
			 |