504.
|
சிந்தை
செய்வது சிவன்கழ லல்லதொன் றில்லார் |
|
|
அந்தி
வண்ணர்ாத மடியவர்க் கமுதுசெய் வித்துக்
கந்தை கீளுடை கோவணங் கருத்தறிந் துதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும்பயன்
கொள்வார்,
|
3 |
(இ-ள்.)
வெளிப்படை. (அவர்) தமது மனத்தினுள்
எஞ்ஞான்றும் வைத்துத் தியானிப்பது சிவபெருமான் திருவடியேயன்றி
வேறொன்று மில்லாதவர்; அந்தி மாலையின் செவ்வான வண்ணராகிய
சிவபெருமானுக்கே உரியவர்களாம் அடியார்களைத் திருவமுது
செய்வித்து, அவர்கள் கருத்தறிந்து அதற்கேற்பக் கந்தையுங் கீளும்
உடையும் உதவி, (அதன் பயனாகத்) தம்பால் வந்த செல்வத்தினது
வளங்களினாலே தாம் இவ்வுலகிற் பிறவி பெற்று வருதலாலுளதாகிய
உறுதிப் பயனைக் கொள்வாராய்,
(வி-ரை.)
இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு படுத்திப்
பொருள்கொள்ளத்தக்கன. சிந்தை செய்வது -
சிந்திப்பது.
கழல் அல்லதொன்றில்லார்
- இரண்டு எதிர்மறைகள்
தேற்றப் பொருளில் உறுதி பெற்றதோர் உடன்பாட்டுப் பொருள்
குறித்தன. “அதுவல்ல தூதியமில்லை யுயிர்க்கு“ (குறள்)
என்றாற்போற் கழலினையல்லாது வேறொன்றினையும் இல்லாதவர்.
இதன் திறத்தை 544-ம் பாட்டில் விரிவாய்க் காண்க.
அந்தி வண்ணர் - அந்தி
- மாலை. அது
அக்காலத்திற்றோன்றும் செவ்வான வொளிக்காயிற்று. ஆகுபெயர்.
“செவ்வான வண்ணர்“ - தேவாரம். தீ
என்பது தி எனக்
குறுகிநின்ற தென்று கொண்டு அம் தீ அழகிய
தீ - நிறம் என
உரைத்தலுமொன்று. “அழல் வண்ண வண்ணர்“, எரிபோன் மேனிப்
பிரான்“, “செந்தீ வண்ணர்“, “தீவண்ணர் திறம்“
முதலிய
திருவாக்குக்கள் காண்க.
கந்தை
- பொந்தை. நாலைந்து ஒன்றன்மேலொன்றாக
வைத்து நூலிழைகளோட்டப்பட்டிருக்கும் போர்வை வஸ்திரம். கீள்
- அரைநாணுக்குப் பதிலாகத் துறவிகள் கட்டிக் கொள்வது என்பர்
காஞ்சிபுரம் வித்வான் சபாபதி முதலியார். கந்தை
- கிழிந்த ஆடை
என்றலுமாம். “கந்தை மிகையாங் கருத்தும்“ - திருஞான
- புரா
270, “சாம்பற் பூச்சுங்கீ ளுடையுங் கொண்ட வுருவம்“ -
திருக்கோலக்காத் தேவாரம் - 1. உடை - இடையில் உடுக்கும்
துகில். ஐகாரம் - செயப்படுபொருளில் வந்த விகுதி; உடுக்கப்படுவது.
கோவணம்
- அற்றத்தை மறைக்கக் கீளுடன் இணைத்துக்
கட்டுவது. இது நால்விரல் அகலத்தும், ஐவிரல் அகலத்தும்
கொள்ளப்படும். “நால்விரற் கோவணவாடை, “ “ஐவிரற் கோவணம்“
என்பன தேவாரம். இச்சரிதம் கோவணத்தினின்று விளைவதாகலின்,
பலவகை உடைகளிலும், இதனைத் தேற்றம்பெற இறுதியில் வைத்தார்.
கருத்தறிந்து உதவி -
அடியார்கள் வேண்டுதலிலராதலால்,
அவர்களது கருத்தைத் தாமே அறிந்து என்க. திருக்குறிப்புத்
தொண்ட நாயனார் சரிதங் காண்க.
வந்த செல்வம்
- “எந்நிலத்தினும் உள்ளன வருவளம்“
என்றபடி பல நிலங்களினின்றும் வந்த செல்வங்கள். முன்னம்
இறைவனைப் பூசித்ததன் பயனாய்த் தம்மிடம் வந்த செல்வம்
என்றலுமாம். வளத்தினால் - அவற்றின்
வாணிபத்தின் விளையும்
வளங்களைக் கொண்டு, ஆல் - மூன்றாம் வேற்றுமை
உருபு;
கருவிப் பொருளில் வந்தது.
வரும்பயன்
- இவ்வுலகில்
வருதலாலுளதாகிய உறுதிப்பயன்.
பயனை வளத்தினாற் கொள்வார் என்க,
கொள்வார்
- கொள்வாராகி - அடைவாராகி; முற்றெச்சம்.
கொள்வார் - அமுது செய்வித்து - வணங்கிச் - சமைத்தார்எனக்
கூட்டி முடிக்க. 3
|
|
|
|