58.
|
வாச
நீர்குடை மங்கையர் கொங்கையிற் |
|
|
பூசு
கும்கும மும்புனை சாந்தமும்
விசு தெண்டிரை மீதழித் தோடுநீர்
தேசு டைத்தெனி னுந்தெளி வில்லதே. |
8 |
(இ-ள்.)
வாசநீர் ......ஓடுநீர் - (காவிரியானது) வாசனையுடைய
தனது நீரிற்குடைந்து ஆடும் பெண்களின் தனபாரங்களிற் பூசிய
குங்குமச் சந்தனப் பூச்சுக்களை மேலே வீசும் தனது அலைகளினால்
அழித்து ஓடுகின்றபடியால், அந்த நீர்; தேசு.......இல்லதே - (மேலே
சொல்லிய பல காரணங்களினாலும்) ஒளியை உடைய தாயினும்
தெளிவில்லதாம்.
(வி-ரை.)
தேசு - (ஒளி) உடைத்தெனினும், குங்குமமும்
சாந்தமும் திரை மீது அழித்து ஓடுதலால் - தெளிவில்லது என்க.
வாசநீர்
- மேற்பாட்டிற் கூறியாங்கு வம்புலா மலர்நீர்.
வீசு தெண்டிரைமீது அழித்து
ஓடும் - மீது வீசு
தெண்டிரையினால் அழித்து என்க. பெண்கள் குளிக்கும்போது தமது
மெய்ப்பூச்சுக்களை அழித்துக் கழுவா முன்னரே அவர்களுக்கு
அவ்வுதவி செய்வது என்றபடி ஆற்றுப்பெருக்கின் அலையும்,
அவர்கள் குடைந்தாடும் அசைவும் சேர்ந்து பூச்சாகிய சந்தனத்தைத்
தானே அழித்தோட வல்லதாயிற்று காவிரி என்க; படிந்தார்க்குத்
திருக்குற்றாலத்து அருவி உதவுதல் போல. மேலே கண்டபடி
அவர்களுக்கு அவ்வுதவி செய்த தேசு - பெற்றதெனினும்
அப்பூச்சுக்களைக் கலத்தலாலே தெளிவில்லதாயிற்று.
அழித்து வீசு தெண்டிரை
மீது ஓடும் - என்று மாற்றிக்
கூட்டி யுரைப்பதும் ஆம். அழித்து அவற்றைத் தனக்குள் சேர்த்து
அலையுடைய கடலை நோக்கி ஓடுகின்ற என்க. தனது நீர்முழுதும்
உயிர்களுக்குத் தந்து பயன் செய் காவிரி - (கடல் வயிறு நிறையாத)
- கடலிற் சென்று சேராததென்று முன்னர்க் கண்டாம்; ஆதலின்
கடலினை நோக்கிப்போகும் காலம் பெருக்குக் காலமேயாம். எனவே,
இப்பாட்டுக் காவிரிப் புதுநீரை உணர்த்திற்று என்று
இப்பொருளில்உரை செய்க.
தெளிவில்லதே - எனினும், தேசுடைத்து - என்றும் ஆம்.
மீதிழித்தோடு - என்பதும் பாடம். 8
|
|
|
|