80.
|
மங்கல
வினைக ளெங்கு மணஞ்செய்கம் பலைக
ளெங்கும் |
|
|
பங்கய
வதன மெங்கும் பண்களின் மழலை
யெங்கும்
பொங்கொளிக் கலன்க ளெங்கும் புதுமலர்ப் பந்த
ரெங்குஞ்
செங்கயற் பழன மெங்குந் திருமக ளுறையு
ளெங்கும். |
30 |
(இ-ள்.)
வெளிப்படை.
(வி-ரை.)
மங்கலவினைகள் - பலவகை மங்கலச் செயல்கள்.
மணஞ்செய் கம்பலை - இவற்றுளே சிறந்ததாகவும்
கம்பலை
மிகுதியாகவும் உள்ளதென்று குறிக்க இதனை வேறுபிரித்துக்
கூறினார். கம்பலை - ஆர்ப்பரிப்பு - முழக்கம். கம்பலைகள் என்ற
பன்மை பல மணங்களில் நிகழும் பல முழக்கங்களையும் பல
வகைகளையும் குறித்தது.
பங்கய வதனம்
- மேற்கூறிய மணமுதலிய மங்கலங்களிற்
கூடி வினைசெய்யும் பெண்களின் தாமரைபோன்ற முகங்கள்.
பண்களின் மழலை - அவ்வினைகளில் அவர்கள்
மழலையினால்
மிழற்றும் பண்ணிசைகள். பெண்களின் இன்சொற்கள்
பண்போன்றிருத்தலாலும் அவர்களது மழலையிற்
பண்களிருத்தலாலும் இவ்வாறு கூறினார்.
“பண்ணி
னேர்மொழி யாளுமை பங்கர்”
-
தேவாரம்.
|
“பண்சுமந்த
பாடற் பரிசு படைத்தருளும், பெண்சுமந்த
பாகத்தன்” -
திருவாசகம்
|
“பண்ணி
னேரும் மொழியாளென் றெடுத்துப் பாடப்
பயன்றுய்ப்பான்” -
திருநாவுக் - புராணம்
|
முதலிய திருவாக்குக்கள்
காண்க.
கலன்கள்
- ஆடவர்களும் மகளிரும் அணியும் அணிகள்.
புதுமலர்ப் பந்தர்
- மேற்கூறிய மங்கல வினைகளுக்காக
அமைந்து அழகு செய்வன. புதுமலர்ப் பந்தர் இடுதல் மங்கலஞ்செய்
வினைகளுள் ஒன்றென்பது.
“பெருந்தண்
கணவீர நறுந்தண் மாலை, துணையுற
அறுத்துத் தூங்க நாற்றி”
|
என்ற திருமுருகாற்றுப்படையாலும்
காணப்பெறும்.
“தாதவிழ்பூந்
தொடைமாலைத் தண்பந்தர் களுஞ்சமைத்து”-
தடுத் - புரா - 121
|
“தோடு
குலவு மலர்மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும்”-
திருநா - புரா - 319
|
என்பனவாதி புராணத் திருவாக்குக்களும்
காண்க.
செங்கயற்
பழனம் - செங்கயல் மீன்களையுடைய வயல்கள்.
திருமகள் உறையுள் -
இலக்குமி வாழும் இடம் -
இருப்பிடம். மங்கல வினைகள் நிகழும் இடங்கள் யாவும் அந்த
வினைகளின் சிறப்புக்களால் இலக்குமி தேவியே வசிக்கும்
இடங்களாகத் தோன்றின என்பது. திருமகள் உறையுள்
- தாமரை
என்றுரைப்பினும் அமையும்.
முதலில் மங்கல வினைகள் எனப் பொதுப்படக் கூறிப்
பின்னர் அவற்றில் நிகழும் கம்பலைகளும், அவற்றில் வினைசெய்
பெண்களும், அவர் மழலையும், அவர் அணிகளும், அவ்விடங்களின்
அழகும் தொடர்ந்து கூறினாராயிற்று. 30
|
|
|
|