89. |
மாட
மாளிகை சூளிகை மண்டபங் |
|
|
கூட
சாலைகள் கோபுரந் தெற்றிகள
நீடு சாளர நீடரங் கெங்கணும்
ஆடன் மாத ரணிசிலம் பார்ப்பன. |
4 |
(இ-ள்.)
வெளிப்படை. மாடம் முதல் அரங்குவரை குறித்த
பலவகை ஆடிடங்களில் எங்கும் ஆடும் மாதர்கள் அணிந்த
சிலம்பும் சத்திப்பன.
(வி-ரை.)
மாடம் - மாளிகை - சூளிகை - மண்டபம் -
கூடம் - சாலைகள் - கோபுரம் - தெற்றிகள் - சாரம் - அரங்கு
இவைகள் வெவ்வேறு ஆடிடங்கள். எண் உம்மைகள் தொக்கன.
அரங்கு எங்கணும்
- அரங்குகளும் ஆகிய ஆடிடங்கள்
எங்கும் - என்று பெய்துரைத்துக் கொள்க. நகருள்ளே ஆடல்
நிகழும் பலவகை இடங்களையும் இப்பாட்டிற் கூறினார். புறநகர்க்
கூத்துக்கு வேறாய்ச், சிலம்பொலிக்க ஆடும் உள்நகர் நிகழ்ச்சியை
இங்குப் பிரித்துக் கூறியவாறு. ஆதலின் மேற்பாட்டிலே மணி
முழவு - என்றதில் மணி என்பதற்கு மணிச் சிலம்பு என்று உரை
கூறுதல் பொருந்தாதுபோலும்.
மாளிகை
- செய்குன்று. தெற்றி - திண்ணை. சாளரம்
-
(பலகணி) பல கண்களையுடையனவாய் ஆடற்கென்று
அமைக்கப்பெற்ற பெரிய ஆடிடங்கள். நீடு சாளரம்
- மிகுந்த
காற்று உட்புகுந்து வீசக்கூடியதாய் அமைக்கப் பெறுவதனால்
இதனைக் காலதர் என்பர். சிலப்பதிகாரத்துக் காண்க. (கால் -
காற்று; அதர் - வழி). நீடு - மான்கண்போன்று
நீண்ட என்க.
அரங்கு
- தெருப் பக்கத்து ஆடிடம். “கமழ்தார் வீதித்,
தேரொடு மரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலும் ...” என்ற
தேவாரமும் காண்க. “மாடமாளிகை கோபுரங் கூடங்கள்
மணியரங் கணிசாலை, பாடு சூழ்மதிற் பைம்பொன் செய்
மண்டபம் பரிசொடு பயில்வாய” (திருக்கோட்டூர் - நட்டராகம்
- 7) என்ற திருஞானசம்பந்தப் பிள்ளையார் தேவாரமும்
இங்குக் குறிக்கத்தக்கது. 4
|
|
|
|