1011.
|
மின்னும்மணி
மாளிகை வாயிலின் வேழ மீது
தன்னின்றுமி ழிந்து தயங்கொளி மண்ட பத்திற்
பொன்னின்னரி மெல்லணைச் சாமரைக் காமர்
பூங்கால்
மன்னுங்குடை நீழ லிருந்தனர் வையந் தாங்கி. 44 |
1011. (இ-ள்.)
வெளிப்படை. விளங்குகின்ற மணிமாளிகை வாயிலில் யானை மேனின்றும் இறங்கி, விளக்க
மிக்க கொலு
மண்டபத்தில் வந்து, பொன்புனைந்த சிங்காசனத்தின் மேல்,அழகிய
சாமரைகளின் மெல்லிய காற்று வீசப்பெற்ற வெண்குடை நீழலில்
உலகங்காவலை மேற்பூண்டு (மூர்த்தியார்) அரசு வீற்றிருந்தனர். 44
1011.
(வி-ரை.) மணிமாளிகை - அரசரது அரண்மனை.
தயங்கும் மணிமண்டபம் - அதனுள் கொலு வீற்றிருக்கும்
மண்டபம்.
பொன்னின்
அரி மெல் அணை - பொன்னாற்
புனையப்பட்டுச் சிங்கம் சுமந்தது போல அமைக்கப்பட்டிருக்கும்
அரச இருக்கை. மென்மை - பஞ்சு, தூவி முதலியவற்றை
உள்ளே
இட்டு, வீற்றிருக்க மெல்லியதாய்ப், பட்டு முதலியவற்றால்
அமைக்கப்படுதல் குறித்தது. Soft cushion என்பர் நவீனர்.
சாமரைப்பூங்கால்
- சாமரைகளை இருபுறமும் மெல்ல
வீசுதலால் உளதாகும் மென்மையாக அசையும் காற்று. காமர்
-
சாமரைகளின் அழகு - வரிசையின் ஒழுங்கு - இவற்றையும்,
பூ -
காற்றின் மென்மையினையும் குறித்தன. நவீனர், மேல் விசிறி
(Punka) வீச அதன்கீழ் வீற்றிருக்கும் இயல்பு காண்க.
மன்னும்
குடைநீழல் - உலகம் தன் கீழ்த்தங்கும் அரச
ஆணைக்கு அடையாளமாகிய வெண்குடையின் நீழலிலே. நீழல்
-
உபசாரம். "வெண்கொற்றக் குடையும், நவமணி முடியும்,
சிங்காதனமும், மன்னவர்க்கேயுரிய சிறப்படையாளமாம்" (சிவஞா -
போ - 8-ம் சூ. சிற்றுரை) என்றது காண்க.
வையந்
தாங்கி இருந்தனர் என்க. தாங்குதல் உபசார
வழக்கு. அரசாளுதல் குறித்தது. "வையம் முறை செய்குவனாகில்"
(1008).
அணை
- நீழல் - ஏழனுருபுகள் தொக்கன.
அணிந்தவர் -
சென்று - தாழ்ந்து - போந்தாராகி - இழிந்து -
நீழல் - இருந்தனர் என்று இந்த இரண்டு பாட்டுக்களும் கூட்டி
முடித்துக்கொள்க. 44
|