1050.
|
புள்ளுந்தண்
புனற்கலிக்கும், பொய்கையுடைப்
புடையெங்குந்,
தள்ளுந்தா ணடையசையத் தளையவிழ்பூங் குவளைமது விள்ளும்பைங் குழற்கதிர்நெல் மிலைச்சியபுன்
புலைச்சியர்கள் கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறை யுங்கலிக்கும். 10 |
(இ-ள்.)
பொய்கையுடைப் புடை எங்கும் - பொய்கையினது
பக்கங்களிலெல்லாம்; புள்ளும்...கலிக்கும் - பறவைகளும் குளிர்ந்த
நீரில் ஒலிக்கும்; தள்ளும்... பறையும் கலிக்கும் - தள்ளாடிச்
செல்கின்ற காலின் நடை அசைதலால் கட்டு விட்டு அலர்ந்த
குவளை மலர்கள் தேனைச் சொரிதற்கிடமாகிய பைங்கூந்தலிலே,
நெற்கதிர்களைச் சூடிய புன்புலைச்சியர்கள், கள்ளினை உண்டு
களியாட்டயர, அதற்கிசைய முழக்கப்படும் பறைகளும் சத்திக்கும்.
(வி-ரை.)
புள் - நீர் வாழ்பறவைகளும், அன்றி, நிலத்தில்
வாழ்பவையாய் ஓரோர்காலம் மீன்களை உண்ணவந்து செல்லும்
பறவைகளும் ஆம்.
பொய்கையுடைப்
புடைஎங்கும் புள்ளும் கலிக்கும்; பறையுங்
கலிக்கும் என்று கூட்டி முடித்துக் கொள்க.
புள்ளும்
- பறையும்- கலிக்கும் என்க. கலித்தல-
ஓசைபட
ஒலித்தல். முன்பாட்டில் அந்தப் புலைச்சேரியில் தரைப் பகுதியினுட்
பல இடங்களிலும் நிகழும் செயல்களைக் கூறிய ஆசிரியர்,
இப்பாட்டினால், அங்குப் பொய்கைக் கரையினில் நிகழ்வனவற்றைக்
கூறுகின்றார். முன்பாட்டிற் கூறியது புலைமக்களின் இன்றியமையாத
வாழ்க்கைத்திறத்தின் நிலையினையும், இப்பாட்டிற் கூறியது அந்த
மக்களின் ஆடல் பாடல் முதலிய மனமகிழ்வுடைய பொழுதுபோக்கு
நிலையினையும் குறிப்பன. தள்ளும் தாள் நடை அசைய...அவிழ்
- குவளை - கால் தள்ள அசைந்து செல்லும் நடை அவர்கள் கள்
உண்ட களிப்பினாலாகிய. அசைய - அசைதலால்.
காரணப்
பொருளில் வந்த வினையெச்சம். கால் தள்ள நடை அசைதலால்
அப்புலைமகளிர் தலையிற் சூடிய குவளைப் போதுகள் விரிந்து தேன்
சொரிந்தன. அசைய அவிழ் என்க. அவிழ்தலால்
மதுவிள்ளும்
என்பதாம்.
குழல்
நெல்கதிர் மிலைச்சிய - புலைமகளிர் பசிய
நெற்கதிர்களைக் குழலில் அணி பெறச் சூடிக்கொள்வர். குவளைப்பூ
என்றும், நெற்பைங்கதிர் என்றும்
கூட்டுக. களிதூங்க கறங்கு
பறையும் கலிக்கும் - புலைமகளிர் களியாட்டயர, அந்த
ஆடலுக்குத் தக்கபடி பறைகள் ஒலிக்கும் என்க. 10
|