1060. (வி-ரை.)
பதிபலவும் இத்தன்மை இறைஞ்சி என்க.
பதி பல - "அருகுளவாஞ் சிவாலயங்கள்" என்றபடி
அணிமையில்
உள்ள திருநின்றியூர், திருநீடுர், திருப்புள்ளிருக்குவேளூர் முதலாயின.
இத்தன்மையில் இறைஞ்சுதலாவது 1053, 1054,
1055-ல் பொதுவாக
உரைத்தபடியும், சிறப்பாகத் திருப்புன்கூரில் இறைஞ்சியபடியுமாம்.
மெய்த்த
- உண்மையில் நின்ற. சிவனே ஆண்டவன் என்றும், உயிர் அடிமையே என்றும்
கரவில்லாது உண்மையில் உணர்ந்த.
உண்மைப்பொருளை அடையச்செய்த என்றலுமாம். "உண்மை நின்ற
பெருகுநிலைக் குறியாள ரறிவு தன்னை" என்ற
திருச்செங்காட்டங்குடித் திருத்தாண்டகம் காண்க.
மிக்கெழுந்த
சித்தம் - இவ்வாறு பல பதிகளிலும் சென்று
தொண்டு செய்தலில் மிகவும் எழுந்ததாகிய சித்தம். சித்தம்-
அந்தக்கரணங்களுள் சிந்திக்கும் தொழில் செய்வது.
திருமன்று
- திருவம்பலம் - திருச்சிற்றம்பலம்-
பொன்னம்பலம்.
உய்த்த
பெரும் காதல் - மனத்தாற் கொண்டு செலுத்திய
பெரிய ஆசை. உய்த்தல் - செலுத்துதல். பெருங்காதல்
- பேராசை
என்றலுமாம். "எமக்கிதுவோ பேராசை? யென்றுந்
தவிரா,
தெமக்கொருநாள் காட்டுதியோ வெந்தாய்!
- அமைக்கவே,
போந்தெரிபாய்ந் தன்னபுரி புன்சடையாய்! பொங்கிரவில்,
ஏந்தெரிபாய்ந் தாடுமிடம்" என்ற அற்புதத்
திருவந்தாதி (70) யின் கருத்தினையும் காண்க.
காதல்
உணர்வு ஒழியாது வந்து உதிப்ப - ஆசையோடு
கூடிய உணர்ச்சி உள்ளிருந்து நீங்காது வந்து தோன்ற. ஒழியாது
உதித்தல்- தடுக்கலாகாதபடி இடைவிடாது உள்ளிருந்து கிளம்புதல்.
20