1082.
|
கறைவி
ளங்கிய கண்டர்பாற் காதல்செய்ம்
முறைமை
நிறைபு ரிந்திட நேரிழை யறம்புரிந் ததனால்
பிறையு
ரிஞ்செயிற் பதிபயில் "பெருந்தொண்டை நாடு
முறைமை யா" மென வுலகினின் மிகுமொழி
யுடைத்தால். 5 |
(இ-ள்.)
கருமை விளங்கும் கழுத்தினையுடைய
சிவபெருமானிடம் அன்பு செய்கின்ற முறைமையின் நிறைவினை
விரும்ப உமையம்மையார் அறம் புரிந்ததனால், பிறைதடவு மளவும்
உயர்ந்த திருமதிலையுடைய தலமானது பயில்கின்ற பெரிய
தொண்டை நாடானது சிவநெறியின் நியதியை யுடையது என்று
உலகத்தார் போற்றும் சிறப்பினை யுடையதாகும்.
(வி-ரை.)
கறை - விடத்தினாலாகிய கருமை. கறை
விளங்கிய கண்டர் - திருநீலகண்டர். கறை
விளங்கிய - தாழ்ந்து
மறைந்து இருக்கத்தக்க கருமையுடையவிடம் சிவபெருமான்
றிருமிடற்றில் தங்கப்பெற்றதனால் விளக்கம் பெற்றது என்ற
குறிப்புமாம். "நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்" என்றது
நீதிமொழி.
காதல்
செய்ம்முறைமை நிறை புரிந்திட - அன்பு
செய்கின்ற முறையாவது சிவபூசை செய்தல். நிறை - நிறைவு;
புரிதல் - விரும்புதல். அம்மையார் சிவபிரானிடம் ஆகமத்
திறங்களைக் கேட்டுத் தாம் சிவபூசைசெய்து அன்பு செய்வதனை
விரும்பிய வரலாறு 1128 - 1131-ல் பார்க்க. "ஈசர்கழல்
முறைபுரிந்த
முன்னுணர்வு" (திருஞா - புரா - 61) என்றது காண்க.
நேரிழை
- நேரிய - அழகிய - இழைகளாலாகிய அணிகளை
அணிந்தனர்.
அறம்புரிந்ததனால்
- அறங்களைச் செய்த வரலாறு 1146 -
1148 - 1149 பாசுரங்களிற் காண்க.
எயிற்பதி
- காஞ்சிபுரம். சாதியொருமையாகக்கொண்டு
அநேக நகரங்கள் என்பாருமுளர். "வளம்பதி பயின்றது" (1079)
எனப் பிற பதிகளை முன்னர்க் கூறியது காண்க. பதி பயில்
நாடு
என்க. பயிலுதல் - விளங்குதல்.
முறைமையாம்
- நீதியுடைத்தாகும். மிகுமொழி - தேற்றம்
பெற அறிவோர் பலரும் எடுத்துரைக்கும் சொல்.
|