அளவு
கண்டு - அளவையினால் அறிந்து. அலர்
தூற்றுதலினால் அதன் உள்ளுறையைக் கருதலளவையினால்
கண்டு என்பது குறிப்பு. தூற்றும் - தூற்றுகின்ற
எனப்
பெயரெச்சமாகக்
கொண்டு, அளவு - தன்மை என்று
கொண்டு, தூற்றும் தன்மை என்றுரைப்பினு மமையும்.
அலர்தூற்றல் - பலரறியப் பழிசொல்லுதல்.
அவர்
குழல் நிறம்கனியும் - அவர் - அவ்விடைச்சியர்;
குழல்நிறம் - குழலின் நிறம்போன்ற கருமை
நிறம். கனியும் -
குழனிற முடையனவாகப் பழுக்கும். களாப்பழம் கருமையுடையது.
"களங்கனியைக் காரெனச் செய்தாருமில்" - நாலடி. "காக்கையிற்
கரிது களம்பழம்" என்று உதாரணமாக எடுத்துக் கூறுவதும்
காண்க. கருமை நிறமே உருவமாகப் பழுத்தது போலும் என்பதாம்.
களா - கள - களவு. "குறியதன் கீழாக் குறுகலு மதனோ டுகர
மேற்றலும்" என்ற விதிப்படி களா என்பது களவு என்று வந்தது.
நிலா - நிலவு என்பதுபோல. "வண்ண நீடிய மைக்குழம் பாமென்று"
(455), "இழுது மையிருட் கிருளென" (திருஞான - புரா - 678)
முதலியவை காண்க.
அக்களவை
- அலர்தூற்றும் என்று களவுக்
குரைத்ததுபோல,இங்கும் அந்தக் களாமரத்தினை என்றும், அந்தக்
களவினை - திருட்டுத்தனத்தை - என்றும் இருபொருள்படக்கூறின
சுவை காண்க.
அ
- அவ்வாறு அலர்தூற்றிய . - என முன்னறி சுட்டு.
எதிர்
சிரிப்பன - எதிர் - அந்த அலர் தூற்றுதலுக்கு
எதிராக; சிரிப்பன - மலர்கின்றன. முல்லை
மலர்தல் சிரித்தல்
போலாகும் என்பது.
"தமக்கும்
உண்டு என்று சிரிப்பன" வௌவிய அந்தக்
களவுத்தன்மை அலர் தூற்றும் தமக்கும் உண்டு என்ற
கருத்துடன் சிரிப்பன.
எயிறு
தளவின் தன்மைத்து - குழல் களவின்
தன்மைத்துஎன்பன தன்மையணிக்குறிப்பு. கனிவு குழனிறங்
களியும் - என்பது உயர்வுநவிற்சி. அலர்
தூற்றல் - சிரித்தல் -
இவை களவு கொண்டது தற்குறிப்பேற்றமும் சிலேடையும்.
ஓரிடத்திலே
வெவ்வேறு பொருள்களைத் திருடிய இருவர்
ஒருவரை யொருவர் அலர் தூற்றிக்கொள்ளும் சுவைபட
உரைப்பது இத்திருப்பாட்டு.
முல்லைக் கருப்பொருள்களும்
களா அதற்குரிய மரமும்,
முல்லை - பூவுமாம்.
தளவு
- கொடிக்கும் பூவுக்கும், களவு - மரத்துக்கும்
(செடிக்கும்) பழத்துக்கும் முதல்சினை யொற்றுமை பற்றிக் கூறினார். களவு அலர் தூற்றும்போது
அரும்பாயிருந்த முல்லை, அது
கண்டபின்சிரிப்பதுபோல அலர்ந்தது என்று முன்பின் கால ஒழுங்கு
காணும்படி, பின்வைத்த வைப்புமுறையும் காண்க. 17