1192.
|
பொன்னிமயப்
பொருப்பரையன் பயந்தருளும்
பூங்கொடித னன்னிலைமை யன்றளக்க லெழுந்தருளு
நம்பெருமான் றன்னுடைய வடியவர்தந் தனித்தொண்டர் தம்முடைய
வந்நிலைமை கண்டன்பர்க் கருள்புரிவான்
வந்தணைவார், 115 |
1192. (இ-ள்.)
வெளிப்படை. பொன்மயமுடைய இமயமலையின்
அரசன் பெற்றருளிய மகளாராகிய பூங்கொடிபோன்ற
பார்வதியம்மையாரது தவநிலையினை உலகறிய அளக்கும் பொருட்டு
முன்னாளில் எழுந்தருளிய நம்பெருமான், தமது அடியவர்களுடைய
ஒப்பற்ற தொண்டரது அந்த நிலைமையினைக் கண்டு அன்பர்க்கு
அருள்புரியும் பொருட்டு வந்து அணைவாராகி, 115
1192. (வி-ரை.)
பூங்கொடிதன் நன்னிலைமை யன்றளக்க
எழுந்தருளும் நம் பெருமான் - அம்மையாரின் நற்பூசையின்
நிலைமையை அளப்பவர்போல உலகிற்காட்ட எழுந்தருளிய பெருமான். 1134 - 1144 பார்க்க.
கந்தபுராணத்துத் தவங்காண்
படலத்து வரலாறு குறித்ததெனினும் ஒக்கும். "குரும்பைமுலை
மலர்க்குழலி கொண்ட தவங் குறிப்பினொடுஞ் சென்றவடன்
குணத்தினைநன் கறிந்து, விரும்பு வரங்கொடுத்தவளை
வேட்டருளிச் செய்த விண்ணவர்கோன்" (கலயநல்லூர்- தக்க - 1)
என்ற நம்பிகள் தேவாரங் காண்க.
அடியவர்தம்
தனித்தொண்டர் - திருக்குறிப்புத்தொண்ட
நாயனார். இவ்வாறு அடியார்களது குறிப்பறிந்து ஏவ
- ல்செய்வ தரிதுஎன்பார்தனி
என்றார்.
அந்நிலைமை
- அடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டின்
தன்மை.
கண்டு
- திருவுள்ளத்திற் கொண்டு என்க. காணுதல்
-
உலகர்க்குக் காட்டும் பொருட்டு. 1204 பார்க்க. அன்பர் - அவர்.
அன்பர் என்றது சுட்டுப்பெயராய் நின்றது.
அருள்புரிவான்
வந்து அணைவார் - புரிவான் -புரிவதற்கு
- புரியும்பொருட்டு அணைபவர் என்க. வானீற்று வினையெச்சம்.
நம்பெருமான்
- அருள்புரிவான் - அணைவார் (1192) - தாங்கி
- குறுகி (1193) - எழுந்தருளிவரும் (1194) என முடிக்க. தாங்கி
-
குறுகி என்ற வினையெச்சங்கள் வரும் என்ற
பெயரெச்சத்தின்
வினையுடன் முடிந்தன.
வந்தணைந்தார்
- வந்தணைவான் - என்பனவும்
பாடங்கள். 115
|