1258. (வி-ரை.)
புராண முனிவர் - பழைய முனிவரர்.
புத்தேளிர் - தேவர்கள்.
விமலமூர்த்தி
- சிவபெருமான். விமலமூர்த்தி என்னும்
அன்மொழித் தொகைத் தொடர்மொழி மலங்கட்குப் பகையான
திருமேனியையுடையவர் எனப் பொருள்தரும். "மூலமாகிய
மும்மல மறுக்குந், தூயமேனி" (திருவாசகம்) என்பது காண்க.
காதல்கூர
- தம்மை அவர்க்குத் தாதை எனக்
கொள்கின்றாராதலின் காதல் என்ற சொல்லாற்
கூறினார்.
பத்தி
முதிர்ந்த- முறுகி வளர்ந்த அன்பினையுடைய."முறுக
வாங்கிக்கடைய" என்ற கருத்துமிது. (கடைதல் - தியானித்தல்;
"தியான நிர்மதனாத்" என்பது சுருதி.)
பாலகனார்
- விமலனார் தம்மைத் தாதை எனக்கொள்வார்
காதல்கூர வெளிப்பட்டபடியால் அதற்கேற்ப நாயனாரையும்
பாலகனார் என்ற சொல்லாற் கூறினார்.
பாதமலர்கள்மேல் விழுதல் - பாதத்தின்கீழ் மரம்போல
வீழ்ந்து அவசமாய்க் கிடத்தல். இக் கருத்துப்பற்றியே மேல்வரும்
பாட்டில். "கீழ் விழுந்தவரை எடுத்து" என்றது காண்க. மேல்
-
ஏழனுருபு. வரும் பாட்டில் கீழ் என்பதுமது. 53