849.
|
இல்லத்திற்
சென்று புக்கா ரிருநிதிக் குவைக ளார்ந்த
செல்வத்தைக் கண்டு, நின்று, திருமனை யாரை
நோக்கி,
"வில்லொத்த நுதலா! யிந்த விளைவெலா மென்கொ?"
லென்ன
"அல்லொத்த கண்ட னெம்மா னருடர வந்த"
தென்றார். 19 |
(இ-ள்.)
வெளிப்படை. நாயனார் தமது திருமனையிற்சென்று
உள்ளே புகுந்தார். பெரிய நிதிக்குவைகளோடு ஏனைச்செல்வங்களை
யெல்லாங்கண்டு, நின்று, தமது திருமனைவியாரை நோக்கி,
"வில்போன்ற நெற்றியையுடைய பெண்ணே! இந்த விளைவுகள்
எல்லாம் வந்தவாறு என்ன?" என்று கேட்க, அவர் "கரிய
இருள்போன்ற நிறம்பொதிந்த திருநீலகண்டனாகிய எம்பிரான்
அருள்தர இச்செல்வம் வந்தது" என்று கூறினார்.
(வி-ரை.)
இல்லம் - வீடு. அம் - சாரியை.
இருநிதிக்
குவைகள் ஆர்ந்த செல்வம் - பொன் குவைகளும் நெல்லும்
அரிசியும் முதலாயின வளங்கள் செல்வம் எனப்பட்டன.
குறைகளோடு நிறைந்த. ஆர்தல் - நிறைதல்.
திருமனையாரை
- இறைவனது திருவருளினை முன்னர்ப்
பெற்று விளங்கினார் என்றும், அவரது கற்பின் பெருமையும் அவர்
தந்த தாலியின்சிறப்புமே இச்சரித விளைவுக்குக் காரணமாயின
என்றும் குறிக்க இவ்வாறு கூறினார். அவர் தந்த திருத்தாலி மீட்டும்
அவரது கழுத்தில் வந்து பொருந்திப் பிரகாசித்தது என்பதும்
குறிப்புப் போலும்.
வில்ஒத்த
நுதல் - பெண்மை யுறுப்பிலக்
கணங்களுட்டலையிற் றலைமையாயினதைக் குறிக்கவே
ஏனையவெல்லாம் உடன்குறிக்கப்பட்டன.
விளைவு
எல்லாம் - பொன்முதலிய பல வளங்களையும்
குறிக்க எல்லாம் என்றார். பொன்னும் நிலத்தினின்
விளைவு என்றே
காணப்படும்.
என்கொல் -
வந்த வரலாறு என்பது வருவிக்க.
அல்லொத்த
கண்டன் எம்மான் அருள் - சிவபெருமானது
திருவருட் பெருமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும்
திருநீலகண்டத்தினை இங்குக் குறித்தார். நாயனாரும் மனைவியாரும்
இதில் அன்பு செலுத்தியவர்கள் போலும். திருநீலகண்ட நாயனார்
புராணம் பார்க்க. தேவமாதர்கள் தாலியிழக்காமற் காத்த
நீலகண்டனே என் தாலியை நான் நீக்காமற் காத்தவன் என்றதும்
குறிப்பாம். அல் - இருள். இங்கு இது கரிய நிறத்தினால்
சிவபெருமானது கண்டத்தில் விளங்கும் விடத்தை ஒத்திருத்தலின்
அதனைக் குறித்தது. எம்மான் - யாவர்க்கும் தலைவனாதலின்
தன்னை அடைந்தோர்களது துன்பஞ் சகிக்கலாற்றாது விரைந்து
அருள்பவன்; ஆதலின் நமக்கு அருள் செய்தனன் என்தாம்.
அருள்தர
- எம்மான் தர என்னாது எம்மான் அருள்தர
என்றது சிந்திக்கத்தக்கது. திருவருட்சத்தியே தரவந்தது. மேல்
அருளாம் - (846) என்றார். இப்பொருள்களில் எல்லாம்
மனைவியார் அவ்வப்பொருள்களைக் காணாது சிவனது
திருவருளையே வெளிப்படக் கண்டார். "நந்தம்மை யாளுடையா,
டன்னிற் பிரிவிலா வெங்கோமா னன்பர்க்கு, முன்னி யவணமக்கு
முன்சுரக்கு மின்னருளே, யென்னப்பொழியாய் மழையேலோ
ரெம்பாவாய்" என்ற திருவாசகத்தில் உலகத்துன்ப நீங்கப் பொழியும்
மழையினை அருளே என்று கண்டு காட்டியபடி இவ்வம்மை யாரும்
காண்கின்றார். நாயனார் தாலியைக் குங்குலியத்துக்கு மாறியதும்,
திருக்கோயில் சேர்ந்திருந்ததும், இறைவன் ஆணைசெய்ததும்
முதலியனவாக இடையில் நிகழ்ந்தனவொன்றும் இவ்வம்மையார்
அறிந்திலரேனும் இவ்வாறு கூறியது, என்றும் எல்லாம் இறைவன்
தருளேயாகக் காணும் அவரது செம்மை பெற்ற திருமனத்தின்
இயல்பு காட்டியது. இதுபற்றியே அருள்தர என்று அருட்சத்தியைத்
துதித்தனர் என்க.
விளைவெல்லாம்
- வெயிலெல்லாம் என்பதுபோல
ஒருமையிற் பன்மை வந்தது; ஆதலின் வந்தது
என்னும் ஒருமை
வினை கொண்டது. 19
|