986. (வி-ரை.)
காய்வுற்ற செற்றம் - ஒரு பொருளை
நடுநிலையில் வைத்துக் காணமுடியாது காய்தலையுடைய சினம்.
செற்றம் - கோபம் - பகைமை. "காய்தலுவத்த லகற்றி
யொருபொருட்கண், ஆய்த லறிவுடையார் கண்ணதே -
காய்வதன்கண், உற்ற குணந்தோன்றா தாகும்" என்பது நீதியுரை.
கண்டகன்
- கொடியவன். கண்டகம் - கொடுமை.
கண்டகம் - முள் என்று கொண்டு முள்ளினைப்போன்ற
துன்பஞ்செய்பவன் என்றுரைப்பாருமுண்டு.
செற்றங்கொடு
காக்கவும் - மேலெழுந்த செற்றத்தினால்
சந்தனங் கொள்ளுந் துறையை அடைத்து, அது கிடையாமற்
காவல்செய்து. உம்மை இழிவு சிறப்பு. காக்க என்றது வாராமல்
காவல்புரிய என்ற பொருளில் வந்தது.
ஆய்வுற்ற
கொட்பு - பல வழியாலும் ஆராய்ந்து திரியும்
மனச்சுழற்சி. கொட்பு - கருத்து என்றலுமாம்.
ஏய்வுற்ற
நல் சந்தனம் - ஆலவாய்ப் பரமனாருக்குச்
சாத்தத்தகுந்த நல்ல மணமும் குணமும் உடையதாய் முற்றிய
உயர்ந்த சந்தனக்கட்டை.
சிந்தை
சாய்வுற்றிட - மனம் ஏக்கம் பொருந்த. "அன்பரும்
சிந்தை நொந்து" (984) என்றவிடத் துரைத்தவை பார்க்க. சிந்தை
-
தமக்கு அந்தம் இலவாம் மிறை செய்யவும் அவ்விடுக்கண்
ஒன்றினுக்கும் அஞ்சாது உறைப்புடன் பணிசெய்து வந்த திண்ணிய
மனம். திருப்பணிக்குரிய சந்தனம் பெறாமையால் திண்மை சாய்ந்தது
என்க. 19