[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1273

(இ-ள்) அங்குள்ள...வணங்கி - அவ்விடையின் உள்ள பிற பதிகளிலே திருமாலுக்கு மறிவரிய இறைவரது திருவடிகளை வணங்கி மேற்சென்று; பொங்கு புனல்...பணிவார் - பொங்கும் நீர்ப்பெருக்கினையுடைய பாலியாற்றின் அருகாக வடபுறத்திலே இறைவர் எங்கும் எழுந்தருளிய பதிகளை வணங்குவாராகி; இலம்பையங் கோட்டூர்....பாடினார் - திருவிலம்பையங் கோட்டூரினை வணங்கிச் சிவந்த கண்களையுடைய இடபத்தை ஊர்தியாச் செலுத்திய இறைவரைத் திருப்பதிகம் பாடித் துதித்தருளினர்.
(வி-ரை) அங்கு உள்ள பிற பதிகள் - அங்கு - அவ்வருகாமையில் - அணிமையில்; இவை திருக்கரபுரம், விரிஞ்சிபுரம், மகாதேவமலை, தீக்காலை(சீக்காலி), வள்ளிமலை முதலாயின என்பது கருதப்படும்.
பொங்குபுனல் பாலியாற்றின் புடையில் வடபால் - பொங்குபுனல் - பெரும்பாலும் மேலே நீர்ஓட்டமின்றி ஊற்றின்மூலங் கால்களில் பொங்கி வரும் நீருடைய; இதுபற்றி முன் (1099) உரைத்தவை பார்க்க. புடையில் வடபால் - காவிரியிற் போல ஆற்றின் கரையினையே சார்ந்து செல்லாது ஆற்றின் வடபக்கம் நாட்டினுள்ளாகப் பலவிடத்தும்.
உகைத்தல் - செலுத்துதல். "பெருந்துறைப் பெருந்தோணி பற்றி யுகைத்தலும்" (திருவா); "ஏறுகந் தேறிய நிமலன்"(1 - 2- 7) என்ற பதிகக் குறிப்பு.
பிற பதிகள் - உயர்ந்தவரை - என்பனவும் பாடங்கள்.

1004

திருஇலம்பையங் கோட்டூர்
திருச்சிற்றம்பலம்

பண் - குறிஞ்சி - 1-ம் திருமுறை

மலையினால் பருப்பதந் துருத்திமாற் பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த்
தானம்
நிலையினா னெனதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக் கானலம் பெடைபுல்கிக்
கணமயி லாலும்
இலையினார் பைம்பொழி லிலம்பையங் கோட்டூ ரிருக்கையாப் பேணியென்
னெழில்கொள்வ தியல்பே.

(1)

கந்தனை மலிகனை கடலோலி யோதங் கானலங் கழிவளர் கழுமல மென்னும்
தந்தியா ருறைபதி நான்மறை நாவ னற்றமிழ்க் கின்றுணை ஞானசம் பந்தன்
எந்தையார் வளநக ரிலம்பையங் கோட்டூ ரிசையொடு கூடிய பத்தும்வல்  

வார்போய்

வெந்துயர் கெடுகிட விண்ணவரோடு வீடுபே றின்மையின் வீடெளி தாமே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- சீபருப்பதம் முதலிய பதிகளில் நிலையினான், பாலன் - விருத்தன் - பசுபதி, நீருளான் - தீயுளான், அந்தரத்துள்ளான், நினைப்பவர் மனத்துளான் என்றின்னோரன்ன தன்மைகளாற் போற்றப்படும் இறைவன் எனதுரை தனதுரையாகக் கொண்டு இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணி என் எழில்கொள்வதியல்பே.
குறிப்பு :- இத்திருப்பதிகம் சைவத்திறத்தின் சிறந்த பல உண்மைகளை எடுத்துக்காட்டி நிற்கும் சிறப்பு வாய்ந்தது; இறைவரது எங்குநிறைந்த தன்மை; பிள்ளையாரது உரையினையே தமது உரையாக இறைவர் கொண்டு வெளிப்படுத்தும் தன்மை (பிள்ளையார் வாக்கு இறைவர் வாக்கே); பிள்ளையார் நற்றமிழ்க் கின்றுணையாதல் - அன்புடை யடியாரை இறைவர் பசுபோத மிழக்கச் செய்து தாமாந்தன்மை செய்தல்; முதலியவை கருதுக.