| ஆனமறை வேதியரா யருள்வேடங் கொண்டிருந்தார் மானமருந் திருக்கரத்தார் வன்றொண்டர் தமைப்பார்த்து. | |
| 157 |
| 3309. (இ-ள்.) மூவாத...அகன்று - எஞ்ஞான்றும் மூப்படையாத முழுமுதல்வராகிய சிவபெருமானது சிறந்த திருக்கோலக்காவினை நீங்கி; தாவாத...இறைஞ்சி - கெடாத புகழினையுடைய சண்பை என்னும் சீகாழிப் பதியினை வலமாகச் சுற்றிவந்து நிலமுறத் தாழ்ந்து வணங்கி; நாவார்...பரவிப்போய் - நாவார்ந்த முத்தமிழ் விரகராகிய திருஞானசம்பந்த நாயனாரது திருவடிகளைத் துதித்துச் சென்று; மேவார்தம்....மேவுவார் - பொருந்தாத பகைவர்கள் வாழும் முப்புரங்களையும் அழித்த சிவபெருமானது திருக்குருகாவூரினைச் சார்வாராகி, |
| 155 |
| 3310. (இ-ள்.) உண்ணீரின்....வரும்பாங்கர் - உண்ணும் நீரின் வேட்கையுடனே பொருந்திய பசியினாலும் மிகவும் வருந்திப் பண்ணின் நீர்மை பொருந்திய மொழியினையுடைய பரவையம்மையாரது கணவராகிய நம்பிகள் வரும் பக்கத்திலே; கண்ணீடு....கருத்தறிந்து - கண்பொருந்திய திருநெற்றியினையுடைய சிவபெருமான் தம்பாற் காதலுடைய நம்பிகளது கருத்தினை யறிந்தாராதலின்; தண்ணீரும்...சார்கின்றார் - தண்ணீரினையும் பொதிசோற்றினையும் உடன் கொண்டு அவ்வழியிலே சார்கின்றாராய், | | 156 |
| 3311. (இ-ள்.) வேனிலுறு...அமைத்தே - வேனிலினில் பொருந்தும் வெயிலின் வெப்பத்தினைத் தணிப்பதற்கு மணமும் குளிர்ச்சியும் உடைய மெல்லிய செங்கழுநீர்த் தடாகம் போலும் பந்தரை ஒருபால் உண்டாகச் செய்தே. மானமரும் திருக்கரத்தார் - மான் பொருந்திய கையினையுடைய இறைவர்; ஆனமறை...கொண்டு - ஆயின மறைவேதியராக அருளுடைய திருவேடத்தினை மேற்கொண்டு; வன்றொண்டர் தமைப்பார்த்து - நம்பிகள் வருகின்றதை எதிர்பார்த்து; இருந்தார் - எழுந்தருளியிருந்தார். | | 157 |
| இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3309. (வி-ரை.) மூவாத - மூப்படையாத; மூப்படைதல் அழிவுகாட்டும். எனவே இறப்பும், அதனைத் தொடர்ந்து பிறவியும் வரும்; மூவாத எனவே அழிவில்லாது என்றும் ஒரு தன்மையாயிருத்தல் குறிப்பு. |
| முழுமுதலார் - தமக்கு மேற்பட்ட முதன்மை யுடையார் இலராவர்; முதலாருடைய என ஆறனுருபு தொக்கது. |
| முதற் கோலக்கா - முதல் - சிறப்பு. |
| தாவாத புகழ்ச்சண்பை - தாவாத - கெடாத; சண்பை - சீகாழியின் 9வது பெயர். |
| சண்பை வலங்கொண்டு தாழ்ந்திறைஞ்சி - சீகாழிப் பதியினுள்ளே மிதிக்காது நகரினையே வலம் வந்து வணங்கி என்க; ஆளுடைய "பிள்ளையார் திருவவதாரஞ் செய்த பெரும்புகலி, யுள்ளுநான் மிதியேனென் றூரெல்லைப் புறம்வணங்கி" நம்பிகள் அப்பதியினை வணங்க இறைவர் எதிர்காட்சி கொடுத்தருளினர் (258) என்பது முன்னர்க் கூறப்பட்டது; அவ்வரலாற்றினை இங்கு நினைவு கூர்க. |
| நாவார் முத்தமிழ் விரகர் - முத்தமிழும் பிள்ளையாரது திருவாக்கிற் பொலிவெய்தின என்பார் நாவார் என்றார். |