614திருத்தொண்டர் புராணம் [வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்]

ஏனை மக்களும் காண வருவனவாம். "கண்டாரைச் சிறுத்தொண்டர் மனைவினவி" (3695) என மேல்வருவது காண்க; ஆயின் இவ்வாறு அவர் திருமேனி புறக் கண்ணாற் காண வரும்போது, அவர் இறைவர் தாமாந் தன்மை அறியவாராது அத்திருக்கோலம் மறைந்த பின்னரே அறிய நிற்பது இதன் தன்மையாதலும் கண்டுகொள்க.

35

3695
தண்டாத தொருவேட்கைப் பசியுடையார் தமைப்போலக்
கண்டாரைச் சிறுத்தொண்டர் மனைவினவிக் கடிதணைந்து
"தொண்டானார்க் கெந்நாளுஞ் சோறளிக்குந் திருத்தொண்டர்
வண்டார்பூந் தாராரிம் மனைக்குள்ளா ரோ?"வென்ன,

36

3696
"வந்தணைந்து வினவுவார் மாதவரே யா"மென்று
சந்தனமாந் தையலார் முன்வந்து தாள்வணங்கி
"அந்தமில்சீ ரடியாரைத் தேடியவர் புறத்தணைந்தார்;
எந்தமையா ளுடையவரே! யகத்துளெழுந் தருளு" மென,

37

3697
டவரலை முகநோக்கி "மாதரார் தாமிருந்த
இடவகையிற் றனிபுகுதோ" மென்றருள வதுகேட்டு
"விடவகல்வார் போலிருந்தா" ரெனவெருவி விரைந்துமனைக்
கடனுடைய திருவெண்காட் டம்மைகடைத் தலையெய்தி,

38

3698
"அம்பலவ ரடியாரை யமுதுசெய்விப் பாரிற்றைக்
கெம்பெருமா னியாவரையுங் கண்டிலர்தே டிப்போனார்;
வம்பெனநீ ரெழுந்தருளி வருந்திருவே டங்கண்டாற்
றம்பெரிய பேறென்றேமிகமகிழ்வ; ரினித்தாழார்,

39

3699
"இப்பொழுதே வந்தணைவ ரெழுந்தருளி யிரு"மென்ன,
"ஒப்பில்மனை யறம்புரப்பீ!; ருத்தரா பதியுள்ளோஞ்;
செப்பருஞ்சீர்ச் சிறுத்தொடர் தமைக்காணச் சேர்ந்தனம்யாம்;
எப்பரிசு மவரொழிய விங்கிரோ" மென்றருளி,

40

3700
ண்ணுதலிற் காட்டாதார் "கணபதீச் சரத்தின்கண்
வண்ணமல ராத்தியின்கீ ழிருக்கின்றோ; மற்றவர்தா
நண்ணினா னாமிருந்த பரிசுரைப்பீ" ரென்றருளி
அண்ணலார் திருவாத்தி யணைந்தருளி யமர்ந்திருந்தார்.

41

3695. (இ-ள்) தண்டாதது........போல - தணியாததாகிய ஒரு பெரும் பசியினையுடையவர் போல; கண்டாரை.....அணைந்து - கண்டார்களை நோக்கிச் சிறுத் தொண்டரது மனையைக் கேட்டறிந்து விரைவில் அங்கு வந்தணைந்து; "தொண்டனார்க்கு....உள்ளாரோ?" என்ன -சிவபெருமானது தொண்டரானார்க்கு எந்நாளிலும், சோறு அளிக்கின்ற திருத்தொண்டராகிய, வண்டுகள் மொய்க்கும் பூமாலையினை அணிந்த சிறுத்தொண்டராகிய, பூமாலையினை அணிந்த சிறுத்தொண்டனார் இம்மனைக்கண் உள்ளாரோ? என்று கேட்க,

36