திருவிளையாடற்
புராணம்
மூலமும்
- உரையும் |
நாற்பத்
தொன்பதாவது
திருவாலவாயான படலம்
|
[அறுசீரடியாசிரிய
விருத்தம்]
|
பாயுடையார்
விடுத்தபழி யழல்வழுதி யுடல்குளிப்பப் பதிக
மோதும்
சேயுடையா ரணந்திளைக்குஞ் செவியுடையா ரளவிறந்த
திசைக
ளெட்டுந்
தோயுடையார் பொன்னிதழித் தொடையுடையார் விடவரவஞ்
சுற்று
மால
வாயுடையார் புகழ்பாடப் பெறுவேமேல் வேண்டுவதிம் மனித
யாக்கை. |
(இதன்
பொருள்.) பாய் உடையார் விடுத்த பழி அழல் - பாயை
ஆடை யாகவுடைய அமணர் (தமது திருமடத்தின்கண்) வைத்த பழிக்கு
ஏதுவாகிய நெருப்பு, வழுதி உடல்குளிப்ப - பாண்டியனுடலிற் சென்று
பற்றுமாறு, பதிகம் ஓதும் - திருப்பதிகம் பாடியருளும், சேய் உடை ஆரணம்
திளைக்கும் செவியுடையார் - ஆளுடைய பிள்ளையாரின் தமிழ் மறையை
இடையறாது நுகருஞ் செவியினை யுடையாரும், அளவு இறந்த திசைகள்
எட்டும் தோய் உடையார் - எல்லையின்றிப் பரந்த எட்டுத் திக்குகளையும்
பொருந்திய ஆடையாகவுடையாரும், பொன் இதழித் தொடை உடையார் -
பொன்போன்ற கொன்றைமாலையை யுடையாரும், விட அரவம் சுற்றும்
ஆலவாய் உடையார் - நஞ்சினை யுடைய பாம்பினாற் கோலி
வரையறுக்கப்பட்ட திருவாலவாயினை யுடையாருமாகிய சோமசுந்தரக்
கடவுளின், புகழ் பாடப் பெறுவேமேல் - புகழைப்பாடும் பேறு
பெறுவேமானால், இம்மனித யாக்கை வேண்டுவது - இந்த மனித்த வுடம்பு
வேண்டுவதே யாகும்.
|