பக்கம் எண் :

கடவுள் வாழ்த்து17



கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
    
களித்துண்டு கருணை யென்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை
    
நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம்.

     (இ - ள்.) உள்ளம் எனும் கூடத்தில் - உள்ளமாகிய கூடத்தில்,
ஊக்கம் எனும் - மனவுறுதியாகிய, தறி நிறுவி - கட்டுத் தறியை நிறுத்தி,
தள்ளரிய - பேதித்தலில்லாத, அன்பு என்னும் தொடர் - அன்பாகிய
சங்கிலியை, உறுதியாகப் பூட்டி - வலிமை பெறப்பூட்டி, இடைப்படுத்தி -
அதில் அகப்டுத்தி, தறுகண் - வன்கண்மையை யுடைய, பாசம் - ஆணவ
சம்பந்தமுள்ள, கள்ளவினை - வஞ்சவினையை யுடைய. பசுபோதம் -
சீவபோதம் ஆகிய, கவளம் இட - கவளத்தைக் கொடுக்க, களித்து -
மகிழ்ந்து, உண்டு - அருந்தி, கருணை என்னும் - அருளாகிய, மதவெள்ளம்
பொழ - மதப்பெருக்கைச் சொரிகின்ற, சித்தி வேழத்தை - சித்திவிநாயகக்
கடவுளாகிய யானையை, நினைந்து - தியானித்து, வருவினைகள் தீர்ப்பாம் -
பிறவி தோறும் தொடர்ந்துவருகின்ற வினைகளை நீக்குவாம் எ - று.

     விநாயகக்கடவுளை வேழமென்றதற்கேற்ப உள்ளம் முதலிய வற்றைக்
கூடம் முதலியவாக உருவகப் படுத்தினார். கூடம் - யானை கட்டுமிடம்.
கவளம் - யானை யுணவு. தொடராற் பூட்டி என விரிப்பினும் அமையும்.
ஆணவத்தாற் பசுபோதமும், அதனால் வினையும் நிகழுமென்க. பசுபோதக்
கவள மிடுதலாவது யான் எனது என்னுஞ் செருக்கற்று வணங்குதல். சித்தி
விநாயகர் : பெயர். இப்பாட்டு இயைபுருவக வணி. (14)

          முருகக் கடவுள்
கறங்குதிரைக் கருங்கடலுங் காரவுணப்
    
பெருங்கடலுங் கலங்கக் கார்வந்
துறங்குசிகைப் பொருப்புஞ்சூ ருரப்பொருப்பும்
    
பிளப்பமறை யுணர்ந்தோ ராற்றும்
அறங்குரவு மகத்தழலு மவுணமட
    
வார்வயிற்றி னழலு மூள
மறங்குலவு வேலெடுத்த குமரவேள்
    
சேவடிகள் வணக்கஞ செய்வாம்.

     (இ - ள்.) கறங்கு - ஒலிக்கின்ற, திரை - அலைகளையுடைய,
கருங்கடலும் - கரிய கடலும், கார் அவுணப் பெருங்கடலும் - கரிய அசுர
சேனையாகிய பெரிய கடலும், கலங்க - கலங்கவும், கார் வந்து உறங்கு -
முகில் வந்து படியப் பெற்ற, சிகை - உச்சியையுடைய, பொருப்பும் -
கிரவுஞ்ச மென்னும் மலையும், சூர் - சூரபன்மாவின், உரம் பொருப்பும் -
மார்பாகிய மலையும், பிளப்ப - பிளவை யடையவும், மறை உணர்ந்தோர்
ஆற்றும் - வேதவிதிகளை நன்குணர்ந்தவர்கள் செய்கின்ற, அறம் குலவும் -
அறத்தோடு கூடிய, மகத்து அழலும் - வேள்வியின்கண் தீயும், அவுண
மடவார் வயிற்றின் அழலும் - அசுரப் பெண்டிர் வயிற்றின்கண் தீயும்,