முனி
மரபில் வந்து வேதம் வல்லனாய்ச் சிவ வழிபாட்டினை
மேற்கொண்ட இராவணனைக் கொன்றமையின் இராமனைக் கொலபை்பழி
பற்றியதென்க. இராமேச்சுரம் இராவணனைக் கொன்ற பழிதீர இராமன்
பூசித்த தென்பதனைத் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல
திருப்பாட்டுக்களிற் கூறியுள்ளார்கள்; அவற்றுள் முறையே ஒவ்வொன்று
பின்வருவன :
"தேவியை வல்விய
தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்று வித்தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல் செய்தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கடம் மேல்வினை வீடுமே" |
|
"கோடிமா தவங்கள்செய்து
குன்றினார் தம்மையெல்லாம்
வீடவே சக்கரத்தா லெறிந்துபின் னன்புகொண்டு
தேடிமால் செய்தகோயி றிருவிரா மேச்சுரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே." |
சீதையின் கற்பு மாண்பினைக்
கம்பராமாயணம், திருவடி தொழுத படலத்தில்.
அனுமான் இராமனுக்குக் கூறுங் கூற்றுக்களால் உணரலாகும். ( )
[கலிநிலைத்துறை]
|
செங்கோ
லனந்த குணமீனவன் றேயங் காப்பக்
கொங்கோ டவிழ்தார்க் குலபூடணன் றன்னை யீன்று
பொங்கோத ஞாலப் பொறைமற்றவன் பாலி றக்கி
எங்கோ னருளாற் சிவமாநக ரேறி னானே. |
(இ
- ள்.) செங்கோல் அனந்தகுண மீனவன் - செங்கோலையுடைய
அனந்தகுண பாண்டியன், தேயம் காப்ப - நிலவுலகைப் பாதுகாப்பதற்கு,
கொங்கோடு அவிழ்தார்க் குலபூடணன் தன்னை ஈன்று - மகரந்தத்தோடு
மலர்ந்த மலர் மாலையையுடைய குலபூடணனைப் பெற்று, பொங்கு ஓதம்
ஞாலப் பொறை - பொங்குகின்ற கடல் சூழ்ந்த நிலச் சுமையை, அவன்பால்
இறக்கி - அக்குலபூடணனிடத்தில் இறக்கி, எங்கோன் அருளால் சிவமாநகர்
ஏறினான் - எம்பெருமானாகிய சோம சுந்தரக்கடவுளின் திருவருளால்
பெருமை பொருந்திய சிவபுரத்தை அடைந்தான்.
ஓதம்
- கடல்;
"ஓதமலி நஞ்சுண்ட
வுடையானே" |
எனத் திருவாசகம்
கூறுவது காண்க. மற்று : அசை. பொறையை இறக்கிச்
சிவமாநகர் ஏறினான் என நயந்தோன்றக் கூறினார். (38)
ஆகச்செய்யுள்
- 1663.
|