முனிபத்தினிகளின்,
நிறை - கற்பினை, அளந்து காட்டுகு என - அளந்து
காட்டுவேனென்று, நெடியோன் மகனைப் பொடி ஆக்கும் அறவன் -
திருமாலின் புதல்வனாகிய மதவேளைப் பொடியாக்கிய அறவடிவினனாகிய
இறைவன், அன்று தான் ஓர் காபாலி ஆகிப் பலிக்கு வருகின்றான் -
அப்பொழுது தான் ஒரு தலைகோட்டை ஏந்தினவனாய்ப் பலிக்கு
வருவானாயினான்.
இவ்வாறுருட்டுநாள்
என்றது பின்சென்று இயையும். தாருகவனம்
என்பது விகாரமாயிற்று. பன்னி - பத்தினி. காட்டுகு - காட்டுவேன்; கு :
தன்மை யொருமை முற்றுவிகுதி. மறவன் எனப் பிரித்து, வீரத்தை
யுடையான என்றுரைத்தலுமாம். காபாலி - கபாலத்தையுடையவன்;
தத்திதாந்தம். தம் : சாரியை. தான் : அசை. (2)
வேத மசைக்குங்
கோவணமு மெய்யி னீறு முள்ளாள்க்
கீத மிசைக்குங் கனிவாயு முள்ளே நகையுங் கிண்கிணிசூழ்
பாத மலரும் பாதுகையும் பலிகொள் கலனுங் கொண்டிரதி
மாதர் கணவன்* றவவேட மெடுத்தா லொத்து வருமெல்லை. |
(இ
- ள்.) அசைக்கும் வேத கோவணமும் - கட்டிய வேதமாகிய
கோவணமும், மெய்யில் நீறும் - திருமேனியிலே திருநீறுங்ம, உள்ளாளக்
கீதம் இசைக்கும் கனிவாயும் - உள்ளாளமாகிய கீதத்தினைப் பாடும் கொவ்
வைக்கனிபோன்ற வாயும், உள்ளே நகையும் - உள்ளே அரும்பிய புன்
முறுவலும், கிண்கிணிசூழ் பாதமலரும் - கிண்கிணி சூழ்ந்த திவடித்
தாமரையும், பாதுகையும் - திருவடியிற் றரித்த பாதுகையும், பலி கொள்
கலனும் கொண்டு - பலியேற்கும் கலனுமாகிய இவற்றைக் கொண்டு, இரதி
மாதர் கணவன் தவவேடம் எடுத்தால் ஒத்து வரும் எல்லை - அழகிய
இரதியின் நாயகனாகிய மதவேள் தவவேடம் எடுத்து வந்தாற்போன்று வரும்
பொழுது.
உள்ளாளம்
- காற்றினை உள்வாங்கிப் பாடும் பாட்டு; இது
பதினொருவகைப்படும்;
"உள்ளாளம்
விந்துவுட னாத மொலியுருட்டுத்
தள்ளாத தூக்கெடுத்த றான்படுத்தல் - மெள்ளக்
கருதி நலிதல்கம் பித்தல் குடிலம்
ஒருபதின்மே லொன்றென் றுரை" |
|
"கண்ணிமையா
கண்டந் துடியா கொடிறசையா
பண்ணளவும் வாய்தோன்றா பற்றெரியா - எண்ணிலவை
கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்தருவர்
உள்ளாளப் பாட லுணர்" |
என்னும் இசை மரபுச்
செய்யுட்களால் உள்ளாளத்தின் வகையும் இயல்பும்
உணர்க. கொண்டு - உடையவனாய். காமக் குறிப்புத் தோற்றும் பேரழகும்
தவவேடமும் உடையனாய் வருதலின் இரதி மாதர் கணவன் றவவேட
மெடுத்தாலொத்து என்றார். (3)
(பா
- ம்.) * மாது கணவன்.
|