தேவு
எனப் பிரித்தலுமாம். சிவன் தேவ தேவனாதலை,
"தேவதேவன் சிவன்பெருந்
தன்மையே" |
என்னும் திருநாவுக்கரசர்
தேவாரத்தா லறிக.
"இவளைநீர் சிந்தித்
தால்முன் னீட்டிய வினையை நீக்கித்
தவலருஞ் சித்தி யெட்டுந் தரும்" |
என முன்பு சிவபெருமான்
அருளிச்செய்தமையால் உமையின் பாவனை
வலத்தால் நன்கு பயின்றா ரென்க. இங்ஙனம் பட்டமங்கையில் அட்ட
மாசித்தி உபதேசித்த வரலாறு,
"பட்ட மங்கையிற்
பாங்கா யிருந்தங்
கட்டமா சித்தி யருளிய வதுவும்" |
எனத் திருவாசகத்திற்
குறிப்பிடப்பெற்றது. (29)
ஆகச் செய்யுள் - 1788
|