பக்கம் எண் :

454திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) தொழும் தொழில் மறந்து - (பெரியாரைக்காணின்)
வணங்குங் கடப்பாட்டினை மறந்து, வேடத்தொழில் உவந்து உழல்வீர் -
வேடர்களின் தொழிலை விரும்பி உழல்கின்றீர், நீர்மண் உழுந்தொழில்
உடைய நீரால் - நீர் நிலத்தினை உழுதலாகிய தொழிலை யுடைய
தன்மையால், பன்றியின் உதரத்து எதி - பன்றியின் கருப்பத்திலுற்று,
கொழுந்தழல் அனைய - கொழுவிய நெருப்பினை ஒத்த (சினத்தினை
யுடைய), ஏனக் குருளையாய் - பன்றிக்குட்டிகளாய்த் தோன்றி தன்தை
தாயை இழந்து அலமுறுமின் என்னா - தந்தையையுந் தாயையும் இழந்து
துன்ப அலமுறுமின் என்னா - தந்தையையுந் தாயையும் இழந்து துன்ப
மெய்துவீராகஎன்று, கடிய சாபம் இட்டனன் - கொடிய சாப மிட்டனன்.

     உழல்வீர் : விளி. உழுங்குலத்திற் பிறந்து அத்தொழிலைக் கை
விட்டுக் கொடுமைசெய் துழலும் நீர் நிலத்தை உழுமியல்புடைய பன்றிக்
குருளைகளாகப் பிறப்பீர் என்றான் என்க. அலமுறுமின் - துன்பம்
எய்துமின்; அலம் - துன்பம். (7)

பாவத்தை யனைய மைந்தர் பன்னிரு பேரு மஞ்சிச்
சாவத்தை யேற்றெப் போது தணிவதிச் சாப மென்ன
ஆவத்தை யகற்று மீச னருட்கழ னினைந்து வந்த
கோவத்தை முனிவு செய்தக் கடவுளர் குரவன் கூறும்.

     (இ - ள்.) பாவத்தை அனைய மைந்தர் பன்னிருபேரும் - பாவமே
உருவெடுத்தாற் போன்ற மைந்தர் பன்னிருவரும், அஞ்சி - பயந்து,
சாவத்தை ஏற்று - சாபத்தினை ஏற்று, இச்சாபம் தணிவது எப்போது என்ன
- இந்தச் சாபம் நீங்குவது எப்பொழுது என்று வேண்டி வினவ, அக்கவுளர்
குரவன் - தேவகுருவாகிய அவ் வியாழன், வந்த கோவத்தை முனிவுசெய்து
- தனக்கு வந்த சினத்தினை வெறுத்து, ஆவத்தை அகற்றும் ஈசன் அருள்
கழல் நினைந்து கூறும் - உயிர்களுக்கு நேர்ந்த) இடையூற்றினை நீக்கும்
இறைவனது அருளுருவாகிய திருவடியைச் சிந்தித்துக் கூறுவான்.

     சாபம் முதலியவற்றிலே பகரம் வகரமாய்த் திரிந்து நின்றது.
சினத்தினைச் சினந்தான் என்க. (8)

என்னைனா ளுடையகூட லேகநா யகனே யுங்கட்
கன்னையாய் முலைதந் தாவி யளித்துமே லமைச்ச ராக்கிப்
பின்னையா னந்தவீடு தருமெனப் பெண்ணோர் பாகன்
தன்னையா தரித்தோன் சொன்னான் பன்னிரு தனயர் தாமும்.

     (இ - ள்.) என்னை ஆள் உடைய கூடல் ஏக நாயகனே - என்னை
ஆளாகவுடைய கூடலம்பதியில் எழுந்தருளிய தனித் தலைவனாகிய
சோமசுந்தரக் கடவுளே, உங்கட்கு அன்னையாய் முலைதந்து ஆவி அளித்து,
உங்களுக்குத் தாயாய்வந்து முலைகொடுத்து உயிரைப் புரந்து, மேல் - பின்,
அமைச்சர் ஆக்கி - பாண்டியனுக்கு அமைச்சர்களாகச் செய்தருளி, பின்னை
- அதன்பின், ஆனந்த வீடுதரும் என - பேரின்ப வீட்டினையும் அருளுவான்
என்று, பெண் ஓர் பாகன் தன்னை ஆதரித்தோன் சொன்னான்-