"ஆக்கமுங் கேடு
மதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு" |
|
"வேட்பத்தாஞ்
சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்" |
என்னும் திருக்குறட்
பாக்களின் பொருளைத் தழுவியுள்ளது. (14)
பழையே மிறையுட் கொளப்பட்ட *மென் றேமாப் பெய்தார்
உழையேவல் செய்யுஞ் சிறார்போல வொதுங்கி வேந்தன்
விழைவே ததனை விடம்போல வெறுத்து வெஃகார்
அழல்போ லணுகா ரகலார்நிழ லன்ன நீரார். |
(இ
- ள்.) நிழல் அன்ன நீரார் - அரசனது உடல் நிழல் போன்று
விடாது நிற்கும் அவ்வமைச்சர், பழையேம் - நாம் பழைமை உடையேம்,
இறை உட்கொள்ளப்பட்டம் என்று ஏமாப்பு எய்தார் - அரசனால் நன்கு
மதிக்கப்பட்டேம் என்று கருதிக் களிப்படையாமல், உழை ஏவல் செய்யும்
சிறார்போல ஒதுங்கி - அருகிலிருந்து ஏவியவற்றைச் செய்யுஞ் சிறுவர்களைப்
போல ஒரு சிறை ஒதுங்கி நின்று, வேந்தன் விழைவு ஏது - வேந்தனால்
விரும்பப்பட்ட பொருள் எதுவோ, அதனை வெஃகார் விடம்போல வெறுத்து
- அதனை விரும்பாது நஞ்சினை வெறுத்தல் போல வெறுத்து, அழல் போல்
அணுகார் அகலார் - அவனைத் தீயைப் போலக் கருதி நெருங்கவுமாட்டார்
நீங்கவுமாட்டார்.
பட்டேம்
என்றாவது பட்டனம் என்றாவது இருக்கற்பாலது பட்டம் என
விகாரமாயிற்று. அழல் என்றது குளிரைப் போக்குதற்குக் காயும் தீயினை. இச்
செய்யுள்,
"பழைய மெனக்கருதிப்
பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்" |
|
"கொளப்பட்டே
மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர"் |
|
"இளையர் இனமுறையர்
என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்" |
|
"மன்னர் விழைப
விழையாமை மன்னரால்
மன்னிய வாக்கந் தரும்" |
|
"அகலா தணுகாது
தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்" |
என்னும் பாக்களின்
பொருளைத் தழுவி வந்தது. இவ்விரு செய்யுளிலும்
காட்டிய திருக்குறட் பாக்களுக்குப் பரிமேலழகர்
கூறிய உரையும்
உணரற்பாலது. (15)
(பா
- ம்.) * இறையூழ் கொளப்பட்டம்.
|