தனக்கென உருவமின்மையாற்
கண்ணாடி வானம்போல்வதாயிற்று. ஆடியில்
அடுத்த பொருளின் நிழல் விளங்கித் தோன்றுதல் போல அரசன் மனக்
கருத்து இவர் நெஞ்சிலே தோன்றிற்று என்றார்; அகத்து நிகழ்வதனை
ஐயப்படாதுணரும் தெய்வத் தன்மை கூறியவாறு.
"அறிகொண் றறியா
னெனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்" |
என்னும் திருக்குறளும்,
"தம்முயிர்க்
குறுதி யெண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி நிடாதுநின் றுரைக்கும் வீரர்"
|
என்னும் இராமாயணச்
செய்யுளும் இங்கு நோக்கற்பாலன. (17)
[எழுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
இன்னவர்
றொழுகும் பன்னிரு வோரு
மீகையுந் தருமமும் புகழுந்
தென்னர்கோ மகற்கு வைகலும் பெருகத்
திசையெலாம் விசயமுண் டாக்கிப்
பன்னகா பரணன் சிவபுர மடைந்து
பரன்கண நாதருட் கலந்து
மன்னிவீற் றிருந்தார் மன்னர்மன் னவனும்
வான்பத மடைந்துவீற் றிருந்தான். |
(இ
- ள்.) இன்னவாறு ஒழுகும் பன்னிருவோரும் - இங்ஙனம் ஒழுகும்
அமைச்சர் பன்னிருவரும், தென்னர் கோமகற்கு - பாண்டியர் பெருமகனுக்கு,
ஈகையும் தருமமும் புகழும் வைகலும் பெருக - பொருளும் அறமும் புகழும்
நாடோறும் பெருகுமாறு, திசை எலாம் விசயம் உண்டாக்கி - திசைதோறும்
வெற்றியை விளைத்து, பன்னக ஆபரணன் சிவபுரம் அடைந்து -
பாம்பணியையுடையவனாகிய இறைவனது சிவலோகத்தை அடைந்து, பரன்கண
நாதருள் கலந்து மன்னி வீற்றிருந்தார் - அவனது சிவகணங்களுட் கலந்து
நிலை பெற்று வீற்றிருந்தனர்; மன்னர் மன்னவனும் - வேந்தர் வேந்தனாகிய
இராசராச பாண்டியனும், வான்பதம் அடைந்து வீற்றிருந்தான் - இந்திர
பதவியைப் பெற்று வீற்றிருந்தான்.
ஈகை
- பொன். பொருளால் அறமும் அறத்தாற் புகழும் அவற்றால்
வெற்றியும் உண்டாதலின் அம்முறையே கூறினார். பன்னகாபரணன் : தீர்க்க
சந்தி. (18)
ஆகச்
செய்யுள் - 2273.
|