பக்கம் எண் :

620திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



நீரையுடைய கங்கையாற்றைக் கடந்து, கல் நெடு அனேக காவதம் நெறி
கடந்த பின்னர் - கற்கள் செறிந்த நீண்ட அனேககாத வழியைக் கடந்த பின்
எ - று.

     ஆடல் - வெற்றி. சடையிற் றாழ்தலால் புனிதமாகிய வென்க;
இவ்வரலாறு முன் உரைக்கப் பட்டது; தாழ்ந்து - தங்கி யென்றுமாம். காவத
நெறியை யெனக் கூட்டுக. (19)

மடங்கன்மா நாகம் யாளி வழங்கலான் மனிதர் செல்லா
இடங்கடந்தாக வைஞ்ஞூற் றிரட்டியோ சனைத்தா மெல்லைக்
கடங்கெழு குமரி கண்டங் கடந்துமற் றதுபோ லெட்டுத்
தடங்கெழு கண்டங் கொண்ட பாரத வருடந் தள்ளி.

     (இ - ள்.) மடங்கல் மா நாகம் யாளி வழங்கலால் - சிங்கங்களும்
பெரிய யானைகளும் யாளிகளும் இயங்குதலால், மனிதர் செல்லா இடம்
கடந்து - மக்கள் வழங்குதல் இல்லாத இடங்க்ளைக் கடந்து, ஆக ஐஞ்ஞூற்று
இரட்டி யோசனை எல்லைத்து ஆம் - இவையெல்லாமாக ஆயிரம் யோசனை
அளவை யுடையதாகிய, கடம்கெழு குமரி கண்டம் கடந்து - காடுகள்
பொருந்தி குமரி கண்டத்தை இங்ஙனம் கடந்து, அதுபோல் எட்டுத் தடம்
கெகு கண்டம் கொண்ட பாரத வருடம் தள்ளி - அது போல விரிவு
பொருந்திய எட்டுக் கண்டங்களைக் கொண்ட பாரத வருடத்தை கழித்து
எ - று.

     ஆக வென்றது முற்கூறிய வெல்லாம் சேர என்றபடி. யோசனை
யெல்லைத்தாம் எனப் பிரித்துக் கூட்டுக. மற்று : அசை. ஒன்பான்
கண்டங்களின் பெயர்களை,

"வடபால் விதேகம் தென்பால் விதேகம்
கீழ்பால் விதேகம் மேல்பால் விதேகம்
வடபா லிரேவதம் தென்பா லிரேவதம்
வடபாற் பரதம் தென்பாற் பரதம்
மத்திம கண்டமென் றித்திற மென்ப
நாவலந் தீவின் நவகண்டப் பெயரே"

என்று திவாகரம் கூறுகின்றது. (20)

யாவையு மீன்றா டன்னை யீன்ற பொன் னிமயந் தன்னைத்
தாவியப் புறம்போய்ப் போகந் ததும்புகிம் புருட கண்டம்
யேவியங் கதுநீத் தேம வெற்படைந் ததுபின் னாக
ஓவியப் புறத்துத் தோன்று மரிவரு டத்தை யுற்று.

     (இ - ள்.) யாவையும் ஈன்றாள் தன்னை ஈங்னற - எல்லா
வுலகங்களையும் பெற்ற உமாதேவியைப் பெற்றதாகிய, பொன் இமயம்
தன்னைத் தாவி அப்புறம் போய் - பொன் வடிவாகிய இமயமலையைத்
தாண்டி அப்பாற் சென்று, போகம் ததும்பு கிம்புருட கண்டம் மேவி -
போகம் நிரம்பிய கிம்புருட கண்டத்தை யடைந்து, அங்கு அதுநீத்து அங்கு
அதனைக் கடந்து, ஏம வெற்பு அடைந்து - ஏம வரையை