பக்கம் எண் :

கான்மாறியாடின படலம்83



     (இ - ள்.) மீனம் வன் கொடியவனாகிய விக்கிரமன் வேந்தன் - கயல்
எழுதிய வலிய கொடியினையுடையவனாகிய விக்கிரமபாண்டிய னென்னும்
மன்னன், தன் தோள் ஏந்து மண் பொளை - தனது தோளாற் சுமந்த
புவிச்சுமையை, இராச சேகரன் புயத்து இறக்கி - இராச சேகரன் என்னும்
புதல்வன் தோளில் இறக்கிவிட்டு, ஐந்தரு நாடன் - பஞ்ச தருக்களையுடைய
நாட்டையுடைய இந்திரனும், பூந் தண்மா மலர் வேதியன் -
பொலிவினையுடைய தண்ணிய சிறந்த தாமலை மலரில் வசிக்கும் பிரமனும,
மாதவன் புத்திரன்மேல் பொலிந்து ஓங்கும் - திருமாலுமாகிய இவர்களுடைய
உலகத்திற்கு மேலே பொலிந்து ஓங்கிய, நீறு சாந்தம் என சண்ணித்த
புண்ணியத் தனிமுதல் நகர் சார்ந்தான் - திருநீற்றினைச் சந்தனமாகப் பூசிய
அற வடிவுடைய ஒப்பற்ற முதற்கடவுளாகிய சிவபிரான் உலகத்தை
அடைந்தான்.

     வல் மீனக்கொடியவனாகிய விக்கிசமவேந்தன் என்க. இராச சேகரன்
புயத்தில் ஏந்துமாறு இறக்கி, தான் சுமை ஒழிந்தமையால் ‘இறக்கி’ என்றார்.
புரத்தின்மேற் பொலிந்தோங்கும் நகர் எனக் கூட்டுக. சண்ணித்தல் - பூசுதல்;

"மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான்"

என்பது திருநாவுக்கரசர் திருவாக்கு. (2)

கண்ண கன்புவி யிராசசே கரன்பொதுக்
     கடிந்துசெங் கோலோச்சி
வண்ண வெண்குடை நிழற்றுவா னானந்த
     வடிவமாய்த் தனிமன்றுள்
அண்ண லாடிய திருநடத் தன்பினா
     லாடனூ லொழித்தேனை
எண்ணு மூவிரு பத்துமுக் கலையுங்கற்
     றிறைமுறை செயுநாளில்.

     (இ - ள்.) இராச சேகரன் கண் அகன்புவி பொதுக்கடிந்த - இராச
சேகர பாண்டியன் இடமகன்ற இந்நிலவுலகைப் பொது நீக்கி, செங்கோல்
ஒச்சி வண்ணம் வெண்குடை நிழற்றுவான் - செங்கோலை நடாத்தி அழகிய
வெண்கொற்றக் குடையால் நிழலைச் செய்து, ஆனந்த வடிவமாய்த் தனி
மன்றுள் ஆடிய அண்ணல் திரு நடத்து அன்பினால் - இன்ப வடிவமாய்
ஒப்பற்ற மன்றின்கண் ஆடியருளும் இறைவனது திருநடத்தில் வைத்த
பேரன்பினால், ஆடல் நூல் ஒழித்து பரதநூலை நீக்கி, எண்ணும் ஏனை
மூவிருபத்து முக்கலையும் கற்று - எண்ணப்படும் மற்றை அறுபத்து மூன்று
கலைகளையும் கற்று, இறைமுறை செயும் நாளில் - அரசியலை முறைப்படி
நடாத்தி வருநாளில்.

     அகன், மருஉ. பொதுக்கடிந்து - தனக்கே உரியதாக்கி. நிழற்று வான்
பெயருமாம். இறைவன் புரியும் திருக்கூத்தினைத் தானும் இயற்றுதல்
தகவுடைத்தன்று எனக் கருதி யொழித்தான் என்பார் ‘திருநடத்தன்பினால்
ஆடனூல் ஒழித்து’ என்றார். (3)