I


108திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     திரை : அதனையுடைய உடலுக் காயிற்று. சூழ்ந்திருத்தலின் புனலை
வேலி யென்றார் - கரை - கரைகளையுடைய மருதம். கானத் தரை -
கானமாகிய தரை; முல்லை நிலம். விண்ணினைத் தாங்குவது போன்
றிருத்தலின், 'விண்டாங்கும்' என்றார். மாடம் என்றது பண்ட சாலைகளை.
அளிப்ப, என்பன : வினையாலணையும் பெயர். குறிஞ்சி முல்லை மருதம்
நெய்தல் என்னும் முறை எதிராக உரைக்கப்பட்டது நான்கு திணையிலும்
உண்டாம் பொருள்கள் இவை என்பதனை,

"அகில்கறி கோட்ட மொடுதக் கோலம்
குங்கும மைந்தும் மலைபடு திரவியம்"

"அரக்கிறா லின்றே னணிமயியற் பீலி
நாவி கான்படு திரவிய மைந்தே"

"செந்நெல் செவ்விள நீர்சிறு பயறு
கன்னல் கதலி யெனப்பெயர் பெற்ற
ஐந்து நன்னாட் டமைந்த திரவியம்"

"பவள முத்துச் சங்கொக் கோலை
உப்புக் கடல்படு திரவிய மைந்தே"

என்னும் பிங்கலந்தைச் சூத்திரங்களா னறிக. (60)

கரிய கம்பலக் கிடுகின்மேற் கதிர் விடு பவளத்
தெரியல் பொன்னரி மாலிகை தெண்ணிலாச் சொரியும்
பரிய நித்தில மணிவட மரகதப் பசுந்தார்
விரிய விட்டன விந்திர வின்னிரை யனைய.

     (இ - ள்.) கரிய கம்பலக் கிடுகின்மேல் - கரிய கம்பலம் வேய்ந்த
சட்டத்தின் மேல், விரிய விட்டன - விரியும்படி விட்டனவாகிய, கதிர் விடு
பவளத் தெரியல் - ஒளிவீசுகின்ற பவளமாலைகளும், பொன் அரி மாலிகை
- பொன்னால் அரிந்து செய்த மாலைகளும், தெள் நிலாச் சொரியும் -
தெளிந்த நிலவைப் பொழிகின்ற, பரிய நித்திலமணிவடம் - பெரிய
முத்துமாலைகளும், மரகதப் பசுந்தார் - பசிய மரகத மாலைகளும், இந்திர
வில் நிரை அனைய - வரிசையாகவுள்ள இந்திர வில்லுகளை ஒத்தன
எ - று.

     மாலைகள் விளங்கித் தோன்றுதற்குக் கரிய கம்பலத்தின்மேல் இட்டு
வைப்பர்; கம்பலம் முகிலையும், மாலைகள் இந்திரவில்லையும் போலுமென்க.
பலநிற முடைமையின் இந்திரவில் உவமம். (61)

நாள்க ளுங்குளிர் திங்களு ஞாயிறு மேனைக்
கோள்க ளுங்குளிர் விசும்பொரீஇக் குடிபுகுந் தாங்கு
வாள்கி டந்திராப் பகலொளி மழுக்கலால் வணிகர்
ஆள்க லம்பகர் பீடிகை துறக்கநா டனைய.