தடாதகைப்பிராட்டியார்
|
செழியர்பிரான்
றிருமகளாய்க் கலைபயின்று
முடிபுனைந்து செங்கோ லோச்சி
முழுதுலகுஞ் சயங்கொண்டு திறைகொண்டு
நந்திகண முனைப்போர் சாய்த்துத்
தொழுகணவற் கணிமணமா லிகைசூட்டித்
தன்மகுடஞ் சூட்டிச் செல்வந்
தழைவுறுதன் னரசளித்த பெண்ணரசி
யடிக்கமலந் தலைமேல் வைப்பாம். |
(இ
- ள்.) செழியர் பிரான் - பாண்டியர் தலைவனாகிய மலையத்
துவசனின், திருமகளாய் - திருமகளாய்த் தோன்றி, கலைபயின்று எல்லாக்
கலைகளையும் கற்று, முடிபுனைந்து - திருமுடி சூடி, செங்கோல் ஒச்சி -
அரசு நடாத்தி, முழுது உலகும் - எல்லா உலகங்களையும், சயங்கொண்டு -
வெற்றி கொண்டு, திறைகொண்டு - திறைப் பெருளை ஏற்று, நந்தி கணம் -
நந்திதேவர் முதலிய சிவகணங்களை, முனைப்போர் - போர்முனையில்.
சாய்த்து - வலிகெடச் செய்து, தொழு கணவற்கு - (தன்னாலும்
அனைவராலும்) தொழப்பெறுகின்ற நாயகனுக்கு, அணிமண மாலிகை சூட்டி
- அழகிய மணமாலையைச் சூட்டி, தன்மகுடம் சூட்டி - தனது
திருமுடியையும் புனைவித்து, செல்வம் தழைவுறு - செல்வம் நிரம்பப்பெற்ற,
தன் அரசு அளித்த - தனது அரசியலையும் கொடுத்தருளிய, பெண்ணரசி -
மங்கையர்க்கரசியாகிய தடாதகைப்பிராட்டியாரின், அடிக்கமலம் - திருவடித்
தாமரைகளை தலைமேல் வைப்பாம் - முடியின்மீது சூடுவாம் எ - று.
இறைவி
பாண்டியற்கு மகளாய்த் தோன்றிப் புரிந்தருளிய செய
லெல்லாம முறையானே இப்பாட்டில் தொகுத்துரைக்கப்பட்டவாறறிக.
நந்திகணம் - நந்தியை முதலாகவுடைய கணம். முனைப்போர் என்பதைப்
போர்முனை என மாற்றுக. சாய்தல் - மெலிதல்; சாய்த்தல் அதன் பிறவினை.
தொழு கணவன் - தொழப்படுங் கணவன். மேற் பாட்டினும் இப்பாட்டினும்
கூறிய வரலாற்றைத் தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப்படலத்தானும்,
திருமணப்படலத்தானும் அறிக. (11)
வெள்ளியம்பலவாணர்
|
பொருமாறிற்
கிளர்தடந்தோ ளொருமாறன்
மனங்கிடந்த புழுக்க மாற
வருமாறிற் கண்ணருவி மாறாது
களிப்படைய மண்ணும் விண்ணும்
உருமாறிப் பவக்கடல்வீழ்ந் தூசலெனத்
தடுமாறி யுழலு மாக்கள்
கருமாறிக் கதியடையக் கான்மாறி
நடித்தவரைக் கருத்துள் வைப்பாம். |
|