I


புராண வரலாறு143



அந்தமண்டபத்திலேறி, சந்தி ஆதி தவம் முடித்து - சந்தியா வந்தனம்
முதலிய தவங்களை முடித்து, ஈறு இலா இந்து சேகரன் - அழிவில்லாத
சந்திர சேகரனாகிய இறைவனுடைய, தாள் நினைந்து ஏத்தி - திருவடிகளைத்
தியானித்துத் துதித்து எ - று.      சந்தியிற் செய்யப்படுவதனைச் சந்தி
யென்றார், தவம் - செய்கடன். ஈறிலானென்க. குளகம் (5)

சம்பு பத்தன் சதானந்த னுத்தமன்
அம்பு யத்த னனைய மகோதரன்
உம்ப ரஞ்சிய வுக்கிய வீரியன்
நம்பு கேள்விப் பிரசண்ட நற்றவன்.

     (இ - ள்.) சம்புபத்தன் சதானந்தன் உத்தமன் - சம்புபத்தனும்
சதானந்தனும் உத்தமனும், அம்புயத்தன் அனைய மகோதரன் - தாமரை
மலரி லிருப்பவனாகிய அயயனை யொத்த மகோதரனும், உம்பர் அஞ்சிய
உக்கிர வீரியன் - தேவர்களும் அஞ்சப்பெற்ற உக்கிர வீரியனும், நம்பு
கேள்விப் பிரசண்ட நல் தவன் - விரும்புகின்ற கேள்வியினையுடைய
பிரசண்டன் என்னும் நல்ல தவத்தை யுடையவனும் எ - று.

     சம்புபத்தன் முதலியவை பெயர். (6)

ஆதி மாதவர் யாவரு மண்புமை
பாதி யாய்முற்று மாகும் பராபரச்
சோதி பால்வைத்த சூதனைத் தோத்திரம்
ஓதி யஞ்சலித் தொன்று வினாவினார்.

     (இ - ள்.) ஆதி - முதலிய, மாதவர் யாவரும் - பெரிய
தவமுடையார் அனைவரும், உமைபாதியாய் - உமையொரு கூறாய், முற்றும்
ஆகும் - முழுதுமாகிய, பராபரச் சோதிபால் - பராபர ஒளிப்பிழம்பாகிய
இறைவனிடத்தில், அன்பு வைத்த சூதனை - அன்பு பூண்ட சூத முனிவனை,
தோத்திரம் ஓதி - துதித்து, அஞ்சலித்து - கைகூப்பி, ஒன்று வினாவினார் -
ஒன்று கேட்பாராயினர் எ - று.

     மேற் செய்யுளிற் கூறப்பட்டாருடன் இயைத்து 'ஆதி மாதவர்' என்றார்.
அன்புவைத்த எனக் கூட்டுக. உமையைத் தன்னுளடக்கித் தானேயாய் நிற்றல்
கருதி 'முற்றுமாகும்' என்றார். புறநானூறறின் கடவுள் வாழ்த்தில்,

"பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்
தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்"

எனக் கூறப்பட்டிருத்தல் காண்க.

"பாதியு மாய்முற்று மாயினார்க்குப் பந்தமும் வீடு மாயினாருக்
காதியு மந்தமு மாயினாருக் காடப்பொற் சுண்ண மிடித்துநாமே"

என்னும் திருவாசகததையும் சிந்திக்க. (7)