I


தீர்த்தவிசேடப் படலம்175



     (இ - ள்.) இந்த நீர் - இந்தத் தீர்த்தத்தால், எம்மை ஆட்டின் -
எம்மைத் திருமஞ்சனஞ் செய்வித்தால், ஏழ் இரண்டு உலகின் - பதினான்கு
உலகங்களிலுமுள்ள, மிக்க அந்தம் இல் - உயர்ந்த அழிவில்லாத, தீர்த்தம்
எல்லாம் - தீர்த்தங்கள் எல்லாவற்றானும், ஆட்டிய பயன் வந்து எய்தும் -
அபிடேகித்தலால் வரும் பயன் வந்து பொருந்தும்; (ஆகையால்), இதில்
வந்து மூழ்கி - இதில் வந்து நீராடி, இங்கு வைகும் - இங்கு
எழுந்தருளியிருக்கும், நம் குறியை - நமது அருட் குறியாகிய சிவலிங்கத்தை,
சிந்தையில் ஆர்வம் பொங்க - உள்ளத்தில் அன்பு மீக்கூர, பூசனை
செய்மின் என்னா - பூசனை புரியுங்கள் என்று கூறி எ - று.

     மிக்க தீர்த்தம் என இயையும். எல்லாம் - எல்லாவற்றானும்.
ஆட்டிய : காரணப்பொருட்டு. (14)

விண்ணவர் தம்மின் மேலாம் வேதிய னாகி நின்ற
பண்ணவன் றானந் நீரிற் படிந்துதன் னனுஞை யாலே*
அண்ணலங் கணத்தி னோரை மூழ்குவித் தனாதி யாய
புண்ணிய விலிங்கந் தன்னுட் புகுந்தினி திருந்தான் மன்னோ.

     (இ - ள்.) விண்ணவர் தம்மில் - தேவர்களுள், மேலாம் வேதியன்
ஆகி நின்ற பண்ணவன் - உயர்ந்த அந்தணனாகிய இறைவன், தான்
அந்நீரில் படிந்து - தான் அத் தீர்த்தத்தில் மூழ்கி, தன் அனுஞையால்
-தன் எவலால், அண்ணல் அம் கணத்தினோரை - பெருமை பொருந்திய
அழகிய கணத்தலைவர்களை, மூழ்குவித்து - மூழ்கச்செய்து, அனாதியாய
புண்ணிய இலிங்கம் தன்னுள் - அனாதியாயுள்ள அறவடிவான
இலிங்கத்துள்ளே, புகுந்து இனிது இருந்தான் - போய் இனிமையாக
வீற்றிருந்தான் எ - று.      இறைவன் 'அறவாழி யந்தணன்' ஆகலின்
மேலாம் வேதியனாகி யென்றார். அம் : சாரியையுமாம். மன், ஓ :
அசை. (15)

அந்தமா நீரா னந்தி யாதியோர் விதியாற் சோம
சுந்தரன் முடிமே லாட்டித் துகளறப் பூசை யாற்றிச்
சிந்தையில் விழைந்த வெல்லா மடைந்தனர் செம்பொற் கஞ்சம்
வந்தவா றிதுவத் தீர்த்த மகிமையு முரைப்பக் கேண்மின்.

     (இ - ள்.) நந்தி ஆதியோர் - திருநந்தி தேவர் முதலான
கணத்தலைவர்கள், அந்தமா நீரால் - அந்தச் சிறந்த தீர்த்தத்தால், விதியால்
- ஆகம முறைப்படி, சோமசுந்தரன் முடிமேல் ஆட்டி - சோமசுந்தரக்
கடவுளின் திருமுடிமேல் அபிடேகித்து, துகள் அறப் பூசை ஆற்றி -
குற்றமறப் பூசித்து, சிந்தையில் விழைந்த எல்லாம் அடைந்தனர் - மனத்தில்
விரும்பியன எல்லாவற்றையும் பெற்றனர்; செம்பொன் கஞ்சம் - சிவந்த
பொற்றாமரைத் தீர்த்தமானது, வந்து ஆறு இது - தோன்றிய முறை
இதுவாகும்; அத் தீர்த்தம் மகிமையும் உரைப்பக் கேண்மின் -
அத்தீர்த்தத்தின் பெருமையையும் சொல்லக் கேளுங்கள் எ - று.

     விழைந்த : வினைப்பெயர்; பெயரெச்சமுமாம். (16)


     (பா - ம்.) * தன்னனுச்சையாலே.