வளையெறி தரங்க ஞான வாவியை நோக்கிற் பாவத்
தளையறு மூழ்கின் வேண்டுங் காமிய மெல்லாஞ் சாரும்
உளமுற மூழ்கு மெல்லை முழுக்கொன்றற் குலகத் துள்ள
அளவறு தீர்த்த மெல்லா மாடிய பயன்வந் தெய்தும். |
(இ
- ள்.) வளை எறி தரங்கம் - சங்குகளை வீசுகின்ற அலைகளை
யுடைய, ஞான வாவியை - ஞான தீர்த்தத்தை, நோக்கில் - தரிசித்தால்,
பாவத் தளை அறும் - பாவத்தொடங்கு நீங்கும்; மூழ்கின் - மூழ்கினால்,
வேண்டும் காமியம் எல்லாம் சாரும் - விரும்புகின்ற பொருள்களனைத்தும்
வந்து கூடும்; உளம் உற மூழ்கும் எல்லை - மனம் பொருந்த மூழ்குங்கால்,
முழுக்கு ஒன்றற்கு - ஒவ்வொரு முழுக்கிற்கும், உலகத்து உள்ள -
உலகங்களிலுள்ள, அளவு அறு தீர்த்தம் எல்லாம் - அளவிறந்த தீர்த்தங்கள்
எல்லாவற்றினும், ஆடிய பயன் வந்து எய்தும் - ஆடியதனால் வரும் பயன்
வந்து பொருந்தும் எ - று.
காமியம்
- விரும்பிய பொருள். மூழ்கு மெல்லை - மூழ்குமிடத்து.
தீர்த்தமெல்லாவற்றிலும் என்க. (17)
மெய்யைமண் ணாதி கொண்டு விதிவழி சுத்தி செய்து
மையறு வருண சூத்த* மந்திர நவின்று மூழ்கில்
துய்யமா தீர்த்த மெல்லாந் தோய்ந்துநான் மறையு மாய்ந்தோர்
கையிலெப் பொருளு மீந்த காசறு பேறு நல்கும். |
(இ
- ள்.) மெய்யை மண் ஆதி கொண்டு - உடலைமண்
முதலியவைகளைக் கொண்டு, விதிவழி - விதிப்படி, சுத்தி செய்து -
தூயதாக்கி, மை அறு - குற்றமற்ற, வருண சூத்த மந்திரம் நவின்று மூழ்கில்
- வருண சூக்க மந்திரத்தை உச்சரித்து நீராடில் (அது), துய்ய மா தீர்த்தம்
எல்லாம் தோய்ந்து - புனிதமான பெருமைபொருந்தியய தீர்த்தங்கள்
எல்லாவற்றினும் மூழ்கி, நான்மறையும் ஆய்ந்தோர் கையில் - நான்கு
வேதங்களையும் ஆராய்ந்துணர்ந்த மறையவர் கையில், எப்பொருளும் ஈந்த
- (அவர்கள் விரும்பிய) பொருள் அனைத்தையும் தானஞ்செய்தலால் வரும்,
காசு அறு பேறு நல்கும் - குற்றமற்ற பயை நல்கும் எ - று.
மண்ணாதியாவன
:- ஒன்பது வகை மண்ணும், எழுவகைத் தளிரும்,
பஞ்ச கவ்வியமும் ஆம்; இதனை,
"அரசு கூவிளந் துழாய்புளி யால்சம்பு
மூலம்
புரசை மால்கரிக் கூடமும் புரவிமந் திரமும்
கரிசி லானிரைத் தொழுவழுங் கல்விநூல் விதியின்
வரிசை யாலெடுத் திடப்படு மண்களொன் பதுமே" |
"தளிர் துழாய்புளி சம்புகூ விளம்வட
மரசு
விளரி லாவறு கென்பன விளம்புகவ் வியங்கள்
அளவில் சீர்தரு மந்நல மறிகபால் தயிர்நெய்
வளநி லாவிய கோசல மயமிவை யாகும்" |
(பா
- ம்.) * சூக்கம்.
|