பூசித்த பேறு என்று
உணர்ந்திலை - நஞ்சினை உண்டருளிய இறைவனை
வழிபட்டதனாலாகிய பயன் என்று நீ அறியாது போயினாய் எ - று.
உளர்தல்
- கிண்டுதல். இறுமாப்பு - மிக்க களிப்பு;
திருவங்கமாலையுள்.
என வருதல் காண்க.
ஆலால முண்டவன் என்றது,
"விண்ணோ ரமுதுண்டுஞ்
சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்யும்" |
இறைவனுடைய அளவிலாற்றலையும்
பேரருளையும் குறிப்பிடற் கென்க,
தேவர்கள் சிவபெருமானை வழிபட்டு வாழ்வதனை,
"வாழ்த்துவதும்
வானவர்கள் தாம்வாழ்வான் மனநின்பாற்
றாழ்த்துவதுந் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டி" |
என்னும் திருவாசகத்தா
னறிக. (14)
சேட்டானை வானவநின் சென்னி செழியரிலோர்
வாட்டானை வீரன் வளையாற் சிதறுகநின்
கோட்டான நாற்கோட்டு* வெண்ணிறத்த குஞ்சரமுங்
காட்டானை யாகவென விட்டான் கடுஞ்சாபம். |
(இ
- ள்.) சேடு ஆனை வானவ - பெரிய வெள்ளை யானையை
யுடைய இந்திரனே, நின் சென்னி - உனது முடியானது, செழியரில் -
பாண்டியருள், ஓர் வாள் தானை வீரன் வளையால் சிதறுக - ஒரு வாளினை
யுடைய சேனையையுடைய வீரனது திகிரியினால் சிதறக்கடவது; நின் - உனது,
கோள் தானம் நால்கோடு - வலிமையையும் மதத்தையும் நான்கு
கொம்புகளையும் உடைய, வெள் நிறத்த குஞ்சரமும் - வெண்மையான
நிறத்தினையுடைய யானையும், காட்டு ஆனை ஆக - காட்டானையாகக்
கடவது; என - என்று, கடுஞ் சாபம் இட்டான் - கொடிய சாபத்தைக்
கொடுத்தான் எ - று.
சேடு
- பெருமை, யானை ஆனையென மருவிற்று. வட்டமாயிருத்
தலின், திகிரி வளையெனப்பட்டது. வீரன் - உக்கிரகுமார பாண்டியன்; ஓர்
வீரன் என்க. கோட்ட என்று குறிப்புப் பெயரெச்சமாகப் பாட
மோதுவாருமுளர். உம்மை இறந்தது தழீஇயிற்று. (15)
சவித்தமுனி
பாதந் தலைக்கொண்டு செங்கை
குவித்தமரர் தங்கோன் குறையிரப்பா ரைய
அவித்தபொறி யாயெம் மரசுங்கா றள்ளுஞ்
செவித்தறுகண் வேழமுந் தீங்குடைய ரன்றோ. |
(இ
- ள்.) அமரர் - தேவர்கள், சவித்தமுனி பாதம் தலைக்கொண்டு
- சாபமிட்ட துருவாச முனிவனுடைய திருவடிகளை முடியிற் சூடி, செங்கை
(பா
- ம்.) * நாற்கோட்ட.
|