I


திருநகரங்கண்ட படலம்297



அருந்தவ ரிருக்கை யந்தண ருறையு
     ளரசரா வணங்குல வணிகப்
பெருந்தெரு நல்வே ளாளர்பே ரறஞ்சால்
     பெருங்குடி யேனைய கரிதேர்
திருந்திய பரிமா நிலைக்களங் கழகந்
     தீஞ்சுவை யாறுநான் குண்டி
இரந்தவர்க் கருத்து நல்லறச் சாலை
     யினையன பிறவுநன் கமைத்தான்.

     (இ - ள்.) அருந்தவர் இருக்கை - அரிய முனிவர்கள் தங்கும்
மடங்களும், அந்தணர் உறையுள் - மறையவர் வசிக்கும் வீடுகளும், அரசர்
ஆவணம் - அரசர் வீதிகளும், குல வணிகப் பெருந்தெரு - சிறந்த
வணிகரின் பெரிய வீதிகளும், பேர் அறம் சால் - பெரிய அறம் நிறைந்த,
நல்வேளாளர் பெருங்குடி - நல்ல வேளாளர்களின் பெரிய குடிகள் நிறைந்த
வீதிகளும், ஏனைய - மற்ற, கரி தேர் திருந்திய பரிமா - யானைகள் தேர்கள்
இலக்கணமமைந்த குதிரைகள் ஆகிய இவைகளின், நிலைக்களம் - தங்கு
மிடஙகளும், கழகம் - கல்விச் சாலைகளும், ஆறு தீம் சுவை நான்கு உண்டி
- இனிய அறுவகைச் சுவையோடு கூடிய நால்வகை உணவுகளை,
இரந்தவர்க்கு அருந்தும் நல் அறச்சாலை - வறியராய் இரந்தவருக்கு ஊட்டும்
நல்ல தரும சத்திரங்களும். இனையன பிறவும் - இன்னும் அவை போல்வன
பிறவும், நன்கு அமைத்தான் - நன்றாகச் செய்தான் எ - று.

     அருந்தவர் - துறவோர், சிவனடியார்; ஆவணம், வீதி யென்னுந்
துணையாய் நின்றது. குடி - குடியிருக்குமிடம். ஏனைய - இவையொழிந்த.
கழகம் - கற்குமிடம்; நூலாராயுமிடம், வாது புரியுமிடம் முதலியன. நான்கு
உண்டி - உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன. (40)

துணிகயங் கீழ்நீர்க் கூவல்பூ வோடை
     தொடுகுளம் பொய்கைநந் தவனந்
திணிமலர்ச் சோலை துடவையுய் யானந்
     திருநகர்க் கணிபெறச் செய்து
மணிமலாத் தாரோன் மாளிகை தனக்கம்
     மாநகர் வடகுண பாற்கண்
டணிநகர் சாந்தி செய்வது குறித்தா
     னண்ணலா ரறிந்திது* செய்வார்.

     (இ - ள்.) துணிகயம் - தெளிந்த நீரையுடைய சிறு குளங்களும், கீழ்
நீர்க் கூவல் - கீழே நீரையுடைய கிணறுகளும், பூ ஓடை - மலரோ
டைகளும், தொடு குளம் - தோண்டப்பட்ட பெரிய குளங்களும், பொய்கை
- பொய்கைகளும், நந்தவனம் - நந்தவனங்களும், திணி மலர்ச் சோலை -
நெருங்கிய மலர்களையுடைய சோலைகளும், துடவை - தோட்டங்களும்,


     (பா - ம்.) * அறிந்தது.