I


30திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



அன்னம் - அன்னப்பறவை யானது, நீர் பிரித்து - நீரை ஒதுக்கி, உண்ணும்
தூய தீம்பால் போல் - தூய்மையோடு கூடிய இனிய பாலை உண்ணுவது
போல, சுந்தரன் சரிதம் தன்னை - சோமசுந்தரக்கடவுளின்
திருவிளையாடலை, கொள்க - கொள்ளக்கடவர் எ - று.

     உம்மை, உயர்வு சிறப்பு. கவி - ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும்
முதலையுடைய செய்யுள். குற்றங் கூறியவர் - நக்கீரர்; இவ்வரலாற்றை
இப்புராணத்திலுள்ள தருமிக்குப் பொற்கிழி யளித்த படலத்தால் அறிக.
அன்னம் பால் உண்ணுவதுபோல எனப் பிரித்துக் கூட்டப்பட்டது. நீர்
பிரித்து என்றதற்கேற்ப என் சொற் குற்றத்தை நீக்கி என உரைத்துக்கொள்க.
(26)

               [கலிநிலைத்துறை]
கவைக்கொ ழுந்தழ *னாச்சுவை கண்டவூ னிமையோர்
சுவைக்க வின்னமிழ தாயின துளக்கமல் சான்றோர்
அவைக்க ளம்புகுந் தினியவா யாலவா யுடையார்
செவிக்க ளம்புகுந் தேறுவ சிறியனேன் பனுவல்.

     (இ - ள்.) கொழும் தழல் - கொழுவிய அக்கினியின், கவை நா -
பிளவுபட்ட நாவினால், சுவைகண்ட - சுவைகாணப்பெற்ற, ஊன் - ஊன்கள்,
இமையோர் - தேவர்கள், சுவைக்க - சுவைத்துண்ண, இன் அமிழ்து ஆயின
- இனி அமழ்தமாயின; (அதுபோல), சிறியனேன் பனுவல் - சிறியேனுடைய
செய்யுட்கள், துளக்கம் இல் சான்றோர் - ஐயந்திரிபில்லாத புலவர்களின்,
அவைக்களம் புகுந்து - அவைக் களஞ்சென்று, இனியவாய் -
மதுரமுடையனவாய், ஆலவாய் உடையார் - திருவாலவாயுடைய இறைவரின்,
செவிக்களம் புகுந்து ஏறுவ - திருச்செவியினிடத்தில் சென்று
பொருந்துவனவாம் எ - று.

     தழல் - வேள்வித்தீ. கொழுந்து அழல் எனப் பிரித்தலும் ஆம்.
துளக்கம் - நடுக்கம். அவைக்களம் : இருபெயரொட்டுப் பண்புத் தொகை.
அவைக்களம் புகுந்து என்றது சான்றோரால் கேட்டுத் துகளறுக்கப்பட்டு
என்றபடி. (27)

பாய வாரியுண் டுவர்கெடுத் துலகெலாம் பருகத்
தூய வாக்கிய காரெனச் சொற்பொருள் தெளிந்தோர்
ஆய கேள்வியர் துகளறுத் தாலவா யுடைய
நாய னார்க்கினி தாக்குப நலமிலேன் புன்சொல்.

     (இ - ள்.) கார் பாயவாரி உண்டு - மேகமானது பரந்த கடல் நீரைப்
பருகி, உவர் கெடுத்து - (அதிலுள்ள) உப்பைப்போக்கி, உலகு எலாம் பருக
- உலகிலுள்ளாரனைவரும் உண்ணும்படி, தூய ஆக்கிய என - தூயவாகும்
படி செய்தாற்போல, சொல்பொருள் தெளிந்தோர் ஆய - சொல்லையும்
பொருளையும் குற்றமற உணர்ந்தோராகிய, கேள்வியர் - கேள்வி வல்லுநர்,


     (பா - ம்.) * கவைக்கொழுந் தெழுநா.