I


304திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



காட்சிக் கெளியனாதலும் கடுஞ்சொல்ல னல்லனாதலும் அடங்க ‘இனியன்’
என்றார்;

"காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறு மன்ன னிலம்"

என்பது தமிழ்மறை. கடல்போல் அளவிடப் படாதனவாகிய இரு
மொழிகளையும் முற்றவும் கற்றவனென்றார்;

"தென்சொற் கடந்தான் வடசொற்கடற் கெல்லை தேர்ந்தான்"

எனக் கம்பர் இராமனைக் கூறுவது இங்கு நோக்கற் பாலது. (2)

வேனில்விறல் வேள்வடிவன் வேட்கைவிளை பூமி
ஆனமட வார்கள் பதி னாயிரிவ ருள்ளான்
வானொழுகு பானுவ வந்தொழுகு சூர
சேனன்மகன் காஞ்சனையை மன்றல்வினை செய்தான்.

     (இ - ள்.) வேனில் விறல் வேள்வடிவன் - வேனிற்காலத்து
வெற்றிகொள்ளும் மதவேள் போலும் வடிவத்தையுடையவன்; வேட்கை விளை
பூமி ஆன - காமப் பயிர் விளைகின்ற பூமியாகிய, மடவார்கள் பதினாயிரவர்
உள்ளான் - காமக் கிழத்தியர்கள் பதினாயிர வரை உடையவன்; வான் ஒழுகு
- வானிற் செல்லாநின்ற, பானுவழி வந்து - சூரியன் மரபில் தோன்றி, ஒழுகு
சூரசேனன் - அத்தின் வழி ஒழுகும் சூரசேனனது, மகள் காஞ்சனையை
மன்றல் வினைசெய்தான் - புதல்வியாகிய காஞ்சனமாலையை
மணஞ்செய்தவன் எ - று.

     காமுகரை வெல்லுமென்க. வேனிலுக்குரிய வெற்றியையுடைய வேல்
என விரித்தலுமாம். வேட்கை - காமம்;

"ஊரவர் கௌவை யெருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்"

என்பதனாலும் காமம் பயிராத லுணர்க. இன்பம் விளைகின் : ஏகதேவ
வுருவகம். பானுவழி யென்றமையாற் சோழனென்று கொள்க. (3)

கண்ணுதலை முப்பொழுதும் வந்துபணி கற்றோன்
எண்ணில்பல நாண்மக விலாவறுமை யெய்திப்
பண்ணரிய தானதரு மம்பவு மாற்றிப்
புண்ணிய நிரம்புபரி வேள்விபுரி குற்றன்

     (இ - ள்.) கண் நுதலை - சோமசுந்தரக் கடவுளை, முப்பொழுதும்
வந்து பணி கற்றோன் - மூன்று காலங்களிலும் சென்று வணங்குதலைக்
கற்றவன்;எண் இல் பலநாள் - அறவிறந்த பல நாட்கள் வரை, மகவு இலா
வறுமை எய்தி - பிள்ளைப் பேறு இன்மையால் வறுமையை அடைந்து
(அதனையொழிக்க), பண் அரிய தான தருமம் பலவும் ஆற்றி - செய்தற்கு
அரிய பல தானங்களையும் தருமங்களையும் செய்து, புண்ணியம் நிரம்பு
பரிவேள்வி புரிகுற்றான் - அறம் நிரம்பிய அசுவ மேதம் செய்யலுற்றான்
எ - று.