இயங்கள் ஒலிக்க,
கடிமாட மனைபுகுந்தான் - காவலைக் கொண்ட
மாளிகையையுடைய அரண்மனையை அடைந்தான் எ - று.
அன்பும்
உவகையும். அகலமெல்லாம் புனல் நிரம்ப வென்க.
நெய்வாக்கு என்பதில் வாக்குதல் - வார்த்தல். நிரப்பி - பூரணாகுதி செய்து
முடித்து. கைவாக்கு - கைப்பக்கம்; வழக்கு; வாகு எனவும் வழங்கும்;
கைகளால் தாக்கப்படும் என்றுரைப்பாரு முளர்; வாக்கும் என்பதற்கு அது
பொருளாகாமை யுணர்க. (26)
முரசதிர்ப்ப மங்கலங்கொண் டெதிர்வருவார்
முகத்துவகை முறுவல் பூப்ப
அரசிருக்கு மண்டபம்புக் கினிதமர்ந்து
கனகமழை யான்ற கேள்வி
விரசிருக்கு மறையவர்கைப் பெய்தெவர்க்கு
மம்முறையால் வெறுப்ப நல்கிப்
பரசிக்குங் கரதலத்தெம் பரன்கோயி
னனிசிறப்புப் பல்க நல்கா. |
(இ
- ள்.) முரசு அரித்ப்ப - பேரிகை ஒலிக்கவும், மங்கலம் கொண்டு
எதிர் வருவார் - எட்டு மங்கலங்களையும் ஏந்தி எதிர் வருகின்ற மகளிரின்,
முகத்து உவகை முறுவல் பூப்ப - முகத்தின்கண் மகிழ்ச்சி நகை தோன்றவும்,
அரசு இருக்கும் மண்டபம் புக்குஇனிது அமர்ந்து - அரசிருக்கை மண்டபத்தற்
புகுந்து இனிதாகக் கொலுவீற்றிருந்து, ஆன்ற கேள்வி விரசிருக்கும் மறையவர்
கை - நிறைந்த கேள்வி பொருந்தப்பெற்ற மறையவர் கைகளில், கனக மழை
பெய்து - பொன் மழையைப் பொழிந்து, எவர்க்கும் அம்முறையால் வெறுப்ப
நல்கி - ஏனை யாவர்க்கும் அங்ஙனமே (அவர்) வெறுக்கும் படி கொடுத்து,
பரசு இருக்கும் கரதலத்து எம்பரன் கோயில் - மழுப்படை தங்கிய
திருக்கரத்தினையுடைய எம் இறைவன் திருக்கோயிலில், நனி சிறப்புப் பல்க
நல்கா - மிகவும் திருவிழா முதலிய பெருகும்படி வேண்டியவற்றைக்
கொடுத்து எ - று.
எட்டுமங்கலம்
- சாமரம், நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு,
விளக்கு, கொடி, இணைக்கயல் என்பன. ஆன்ற - நிறைந்த; அகன்ற
என்பதன் மரூஉ. விரசியிருக்குமென்பது விகாரமாயிற்று. வெறுத்தல்
செறிதலாகலின் வெறுப்ப என்பதற்கு மிக என்றுரைத்தலுமாம். நல்கா -
நல்கி : செயப்படுபொருள் வருவிக்க. (27)
சிறைவிடுமின் சிறைக்களமுஞ் சீத்திடுமி
னேழாண்டு தேயத் தீட்டும்
இறைவிடுமி னயல்வேந்தர் திறைவிடுமி
னிறைநிதிய மீட்டு மாயத்
துறைவிடுமி னறப்புறமு மாலயமும்
பெருக்குமெனத் தொழாரைக் காய்ந்த
கறைவிடுமின் னயில்வேலான் வள்ளுவனைக்
கூய்முரசங் கறங்க்ச் சாற்றி. |
|