I


திருமணப் படலம்371



பன்னிய துதியின ரியலெழின்
     மகளிரை யழகுசெய் பரிசென
இன்னிய லெழில்வள நகரெலாஞ்
     செயல்வினை யணிபெற வெழில்செய்வார்.

     (இ - ள்.) கன்னி தன் மணம் முரசு அறைதலும் - பிராட்டியாரின்
திருமண முரசு அறையப்பெற்ற வளவில், கடிநகர் உறைபவர் - காவலை
யுடைய அம் மதுரைப் பதியில் வசிப்பவர் அனைவரும், கரைகெட துன்னிய
உவகையர் - எல்லையில்லாது - ஓங்கிய மகிழ்ச்சியை யுடையவராய்,
கடவுளைத் தொழு கையர் - இறைவனை வணங்கிக் கூப்பிய கையினை
யுடைணவராய், உடலம் முகிழ்ப்பு எழ - உடல் முழுதும் புளகம் அரும்ப,
பன்னிய துதியினர் - பாடிய துதிப்பாட்டுக்களை யுடையவராய், இயல் எழில்
மகளிரை அழகுசெய் பரிசென - இயற்கை யழகுள்ள மகளிரை
அணிமுதலியவற்றால் செயற்கை யழகு செய்யுந் தன்மை போல, இன் இயல்
எழில் வள நகர் எலாம் - இனிய இயற்கையழகும் வளப்பமுமுடைய நகர்
முழுதையும், செயல்வினை அணிபெற - செய்தலை யுடைய தொழிற்
றிறங்களால் அலங்காரம் பெற, எழில் செய்வார் - அழகுசெய்யத்
தொடங்குவார்கள் எ - று.

     மணத்தை முரசு அறைதலும் என்றுமாம். தொழுகையர் - தொழு
தலையுடையவர், தொழும் கையினை யுடையவர் என இருவகையாற் பொருள்
கூறலாகும். உடலம், அம் : சாரியை. இயல் - இலக்கணமுமாம். இங்கே கூறிய
உவமம் பாராட்டற் குரியது. (48)

கோதையொ டும்பரி சந்தனக் குப்பை களைந்தனர் வீசுவார்
சீதள மென்பனி நீர்கடூய்ச் சிந்தின பூமி யடக்குவார்
மாதரு மைந்தரு மிறைமகள மன்றல் மகிழச்சி மயக்கினாற்
காதணி குழைதொடி கண்டிகை கழல்வன தெரிகிலதொழில் செய்வார்.

     (இ - ள்.) மாதரும் மைந்தரும் - மகளிரும் ஆடவரும், கோதை
யொடும் பரி சந்தனக்குப்பை - மாலையோடும் நீங்கிய சந்தனக்குப்பைகளை,
களைந்தனர் வீசுவார் - களைந்து (புறத்தே கொண்டுபோய்) எறிவார்கள்,
சீதளம் மென் பனி நீர்கள் தூய் - குளிர்ந்த மெல்லிய பனிநீரைத் தெளித்து,
சிந்தின பூமி அடக்குவார் - சிதறிய புழுதியை அடக்குவார்கள்; இறைமகள்
மன்றல் மகிழ்ச்சி மயக்கினால் - அரச குமாரியாகிய பிராட்டியாரின்
திருமணங் காரணமாக எழுந்த மகிழ்ச்சி மயக்கத்தால்; காது அணிகுழை -
காதில் அணிந்த குழைகளும், தொடி - வளைகளும், கண்டிகை -
கண்டிகைகளு மாகிய இவைகள், கழல்வன தெரிகிலர் தொழில் செய்வார் -
கழலுதலைத் தெரியாதவர்களாய் அலங்காரம் செய்வார்கள் எ - று.

     பரி என்பதனைக் கோதைக்குங் கூட்டுக. பரிதல், நீங்குதல் எனத்
தன்வினையும், நீக்குதல் எனப் பிறவினையுமாகும். களைந்தனர்கள், தெரிகிலர் :
முற்றெச்சங்கள். நீர், கள் : இசைநிறை; விகுதியாயின் நீரின்வகை கருதிற்றாம்.
இறைமகன் - அரசன் புதல்வியும், அரசியும் ஆம். கண்டிகை - கழுத்தணி. (49)