I


திருநாட்டுச் சிறப்பு43



"கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோ ரேர்மங் கலமும்"

என்னும் நாடுகாண்காதையால் பொன்னேர் பூட்டு மியல்பும் அதற்கு ஏர்
மங்கலம் பாடுவதுண்டென்பதும் விளங்கும்.

     ஒருத்தல் எருமைக்கடாவாதலை ‘ஏற்புடைத்தென்ப எருமைக்
கண்ணும்’ என்னும் மரபியல சூத்திரத்தானறிக. மனத்தை அடக்கி னோர்க்கு
ஐம்பொறிகளும் ஏவல் செய்யுமென்றார். ல ளு வொற்றுமைபற்றி அலமரு
அளமருவென நின்றது. (18)

பலநிற மணிகோத் தென்னப் பன்னிற வேறு பூட்டி
அலமுக விரும்பு தேய வாள்வினைக் கருங்கான் மள்ளர்
நிலமக ளுடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச்
சலமென நிவந்த செங்கேழ்த் தழன்மணி யிமைக்கு மன்னோ

     (இ - ள்.) பலநிறமணி கோத்தென்ன - பல நிறங்களையுடைய
மணிகளைக் கோவை செய்ததுபோல, பல் ஏறு பூட்டி - பல நிறங்களை
யுடைண எருதுகளைப் பூட்டி, அலம் முக இரும்புதேய - கலப்பையின்
முனையிலுள்ள கொழுத் தேயும்படி, ஆள்வினை - உழுதொழில் செய்யும்,
கரும் கால் மள்ளர் - வலியகாலினையுடைய உழவர்கள், நில மகள் -
புவிமடந்தையில், உடலம் கீண்ட - உடலைக் கிழித்த, சால் வழி -
படைச்சாலின் வழியே, நிமிர்ந்த சோரிச் சலமென - பொங்கிய
உதிரவெள்ளத்தைப்போல, நிவந்த செம்கேழ் - உயர்ந்த செந்நிறத்தை
யுடைய, தழல்மணி இமைக்கும் - நெருப்புப் போன்ற மணிகள் ஒளிவீசா
நிற்கும் எ - று.

     கருங்கால் என்பதிற் கருமை வலிமை; ‘கருந்தொழில் வினைஞர்’
என்னும் சிறுபாண உரையிற்காண்க; நிறமுமாம். நிலமகள் என்ற தற்கியைய
உடலென்றும், சோரியென்றும் கூறினார். தழல்மணி - மாணிக்கம்.
கோத்தென்ன தொகுத்தல். உடலம், அம் சாரியை. மன் ஓ : அசை. (19)

ஊறுசெய் படைவாய் தேய வுழுநரு நீர்கால் யாத்துச்
சேறுசெய் குநருந் தெய்வந் தொழுதுதீஞ் செந்நெல் வீசி
நாறுசெய் குநரும் பேர்த்து நடவுசெய் குநருந் தெவ்வின்
மாறுசெய் களைகட் டோம்பி வளம்படுக் குநரு மானார்.

     (இ - ள்.) (அவ்வுழவர்கள்) ஊறுசெய் - (புவியைக்) கிழக்கின்ற,
படைவாய் தேய - கலப்பையின் முகம்தேயும்படி, உழுநரும் -
உழுகின்றவர்களும், நீர்கால் யாத்து - நீரினைக்கட்டி, சேறு செய்குநரும் -
சேறாக்குகின்றவர்களும், தெய்வம் தொழுது - (அந்நிலக்கடவுளாகிய)
இந்திரனை வணங்கி, தீம்செந்நெல் வீசி - இனிய செந்நிலமுடைய
நெல்முளைகளை விதைத்து, நாறு செய்குநரும் - நாறுசெய்கின்றவர்களும்
-பேர்த்து நடவுசெய்குநரும் - (அவற்றைப்) பெயர்த்து நடுகின்றவர்களும்,
தெவ்வின் மாறுசெய் - பகைவரைப்போலப் பகை செய்கின்ற, களைகட்டு -