I


மலயத்துவசனை யழைத்த படலம்511



பின்னே நின்று இழுத்தலால், உள்ளத்தோடும் இரு கண்ணும் சென்ற முட்டி
அடிக்கடி திரும்பி நோக்க - (தமது) உள்ளத்துடன் இரண்டு விழிகளும்
சென்று நெருங்கி அடிக்கடி திரும்பிப் பார்க்க, குன்று உறழ் விமானம்
தன்னை - மலையை யொத்த விமானத்தை, அஞ்சலி கூப்பிச்செல்வார் - கை
கூப்பி வணங்கிச் செல்லா நின்றார் எ - று.

"போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப் போவர்
காதலி னோக்கி நிற்பர் கன்றகல் புனிற்றாப் போல்வர்"

என்னும் பெரிய புராணத் திருவிருத்தம் ஈண்டுச் சிந்திக்கற்பாலது.
ஈர்த்தெழ - ஈர்க்க சென்னும் மாத்திரையாய் நின்றது. அஞ்சலியாகக்
கைகூப்பி யென்க. அஞ்சலி கூப்பி யென்பது ஒரு சொல்லாய் இரண்டாவதற்கு
முடிபாயிற்று. (27)

[- வேறு]
புவலோகங் கடந்துபோய்ப் புண்ணியருக்
     கெண்ணிறந்த போக மூட்டுஞ்
சுவலோகங் கடந்துபோய் மகலோகஞ்
     சனலோகந் துறந்து மேலைத்
தவலோகங் கடந்துபோய்ச் சத்தியலோ
     கங்கடந்து தண்து துழாயோன்
நவலோகங் கடந்துலக நாயகமாஞ்
     சிவலோக நண்ணி னாரே.

     (இ - ள்.) புவலோகம் கடந்துபோய் - (பூலோகத்தி னீங்கிப்)
புவலோகத்தைக் கடந்து சென்று, புண்ணியருக்கு எண் இறந்த போகம்
ஊட்டும் - அறஞ்செய்தவருக்கு அளவிறந்த இன்பத்தை நுகர்விக்கும்,
சுவலோகம் கடந்துபோய் - சுவலோகத்தைக் கடந்துசென்று, மகலோகம்
சனலோகம் துறந்து - மகலோகத்தையும் சனலோகத்தையும் கடந்து, மேலைத்
தவலோகம் கடந்துபோய் அவற்றின் மேலுள்ள தவலோகத்தையும் கடந்து
சென்று, சத்தியலோகம் கடந்து - சத்திய லோகத்தையும் கடந்து, தண்
துழாயோன் நவலோகம் கடந்து - தண்ணிய துழாய் மாலை அணிந்த
திருமாலின் நவலோகத்தையும் கடந்து, உலக நாயகம் ஆம் சிவலோகம்
நண்ணினார் - உலகங்களுக்கொல்லாம் தலைமையாகிய சிவலோகத்தினை
அடைந்தார் எ - று.

     புவலோகம் முதலியவற்றின் அளவையும்,அவற்றின் வசிப்போரையும்
பின் வரும் சிவதருமோத்தரச் செய்யுட்களால் அறிக.

"தரைக்கு மேற்புவ லோக மதுதனில்
அருக்கன் சோம னெனுமிவ ராதியர்
இருப்பர் தத்தம் பலத்தினை யெய்தியே
பரித்த நீளம் பதினைந் திலக்கமே"
 
"அதற்கு மேலம ரேச னரும்புரி
அதற்கு நீளம் அசீதியு மைந்துமாம்