I


512திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



அதற்கு மேன்மக லோக மதுதனில்
வதிப்பர் மாதவ ராதி மரீசியும்"
 
"உயரந் தானிரு கோடி யுறுமதற்
குயரு மெல்லை சனதல முன்னதம்
உயரு நாலிரு கோடியென் றுன்னுக
உயரு மாபிதிர் தேவ ருறைவரே"
 
"அதற்கு மேற்றவ லோக மருந்தவர்
அதற்குள் வாழ்வர் சனகனை யாதியர்
அதற்கு நீளமு மாறிரு கோடியாம்
அதற்கு மேலயன் றேசமென் றாய்கவே"
 
"அதற்கு நீளமு மாறுடன் பத்துறும்
அதற்கு மேலரி தேசமென் றாய்கவே
அதற்கு நளநாற் கோடியென் றாய்கவே
அதற்கு மேற்சிவ லோகமோ ராறுறும்"

(28)

அறக்கொடிபின் பினறைமகனை யடிபணிந்து
     தனையீன்றார்க் காதி வேத
மறைப்பொருடன் வடிவளித்த வருளின்மன
     நிறைமகிழ்ச்சி வாய்கொள் ளாமற்
புறப்படு தெனவிரண்டு திருசெவிக்குஞ்
     செங்குமுதம் பொதிந்த தீந்தேன்
நிறைப்பதெனப் பன்முறையாற் றுதிசெய்து
     தொழுதொன்று நிகழ்த்தா நின்றாள்.

     (இ - ள்.) அறக் கொடி - தருமவல்லியாகிய பிராட்டியார், பின்
இறைமகனை அடி பணிந்து - பின்பு தம் தலைவனை அடி வணங்கி, தனை
ஈன்றார்க்கு - தம்மைப் பெற்றவர்க்கு, ஆதி வேத மறைப்பொருளை தன்
வடிவு அளித்த அருளின் - முதன்மையாகிய வேதத்தின் உட்பொருளாகிய
பெருமான் தனது சாரூபத்தைக் கொடுத்தருளிய கருணை பற்றி, மனம் நிறை
மகிழ்ச்சி வாய் கொள்ளாமல் புறப்படுவது என உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சி
வாய் கொள்ளாமல் புறப்படுவது என - உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சிானது
வாயுளடங்காது வெளிப்படுகின்ற தென்னும்படி, இரண்டு திருச்செவிக்கும்
செங்குமுதம் பொதிந்த தீம் தேன் நிறைப்பது என - இரண்டு திருச்
செவிகளிலும் (தமது திருவாயாகிய) செவ்வாம்பல் மலரின் மிக்க இனிய
தேனை நிறைப்பது போல, பன் முறையால் துதி செய்து தொழுது -
பலவகையாகத் துதித்து வணங்கி, ஒன்று நிகழ்த்தா நின்றாள் - ஒன்று
கூறுகின்றார் எ - று.

     அடி பணிந்து என்பது ஒரு சொல்லாய் இறைமகனை யென்னும்
இரண்டாவதற்கு முடிபாயிற்று; இறை மகனது அடியை என விரித்தலுமாம்.
மறைப்பொருள் - மறையாகிய பொருள்; உட் பொருட்; வேதமாகிய மறை
யென்னலுமாம். உவகை மிகுதியால் நிரம்பப் பேசுதலை வாய் கொள்ளாமற்
பேசுதல் என்பர். செவிக்கும் - செவியினிடத்தும் : வேற்றுமை மயக்கம். (29)